பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

83


விலை மதிப்பில்லாதது அறிவு. காரணம், முழுவதுமாக நாம் அதை அடைய நேரம் கிடைப்பதில்லை.

-தோ

அமைதியாக நான் வழிபாடு செய்வதை உனக்கு நான் சொல்லும் நன்றி அழித்து விடக் கூடாது.

-மின்

இன்று பகலில் பாடவேண்டிவற்றை நான் பாடிவிட்டேன். மாலையில் புயல் வீசும் தெரு வழியாக உனது விளக்கை நான் எடுத்துச் செல்வேன்.

-ப.ப

வாழ்வின் வேட்கைகள் குழந்தைகளின் உருவத்தில் வருகின்றன.

-மின்

வீட்டிற்கு வா என்று நான் உன்னை அழைக்கவில்லை.

கரை காண முடியாத தனிமையில் நான் வாடும் போது உடனிரு, என் அன்பே

-ப.ப

வெளியில் சொல்லப்படாத அன்பு புனிதமானது. மனச் சோர்வின் இருண்மையில் மாணிக்கமாய் அது ஒளிர்கிறது.

-தோ