திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 129
எனக்கு வேறு சிகிச்சை செய்ய முடியுமா? தியாகம், தியாகம் என்று நொடிக்கு நூறு தரம் சொல்லியும் பேசியும் எழுதியும் வந்த தாங்கள், இப்போது, என்னைத் தியாகியாக்க ஒரு வாய்ப்புத் தந்து, அதன் மூலம் நீங்களும் தியாகியாக ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கிக் கொள்ள மறுக்கிறீர்களே, ஸார்? நீங்கள் முன்பு எழுதியது மாதிரி, காதல் என்பது சிறுபிள்ளைகளின் பொய் விளையாட்டு ஸார்! என்னை மறந்து விடுங்கள்; நம் காதலையும் மறந்துவிடுங்கள். என்மீதுள்ள மயக்கம் காரணமாக, என் உயிர்த் தோழி தவசீலியின் குணநலத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் ஒரு சொட்டுக் கண்ணிரை அவள் முன் காட்டியிருந்தால் கூட, அவள் என்றோ தன்மனக் காதலை விட்டுக் கொடுத்து ஒதுங்கியிருப்பாள். ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. ஏன் தெரியுமா? என்னைக் காட்டிலும் அவள் உங்களை இன்னும் பக்தி பூர்வமாக நேசித்ததை அறிந்தேன். எழுத்துப்பித்துக் கொண்ட அவளே உங்களுக்கு உகந்த ஜோடி என்பதையும் உணர்ந்தேன். அதன் பிறகு, நான் வாயடைத்துப் போனேன். எனக்கும் உங்கட்கும் இடையில் நிலவிப் பூத்த காதல் மலரை அவளுக்குக் காட்டாமல் மறைத்தேன். நடக்கவிருந்த திருமணம் ஏதோ இயற்கை வசமாகவே நிகழப் போவதாகவும் சொன்னேன். உங்களைத் தவசீலியின் நிதிப் பொருளாக ஆக்கித் தருவதாக அவளிடம் வாக்குக் கொடுத்து அவளை இங்கு வரும் படியும் தூண்டி விட்டுத்தான் நான் இப்பொழுது வந்திருக்கிறேன்!”
மீண்டும் அவளுக்குச் சோர்வு வந்தது, மனக் களைப்பு வேறு.
தி.சொ.நி.-9