498
அந்தமான் கைதியைப் படைத்ததன் மூலம் கவினார் கு. சா. கி. தமிழ் நாடக உலகில் அழியாத இடம் பெற்றுவிட்டார். தமிழ் நாட்டிலும், இந்தியாவின் பிறமாநிலங்களிலும் சிங்கப்பூர், மலைசியா, இலங்கை, பர்மா, தென்னப்பிரிக்கா முதலிய தமிழர் வாழும் பிரதேசங்கள் அனைத்திலும் அந்த நாளில் அந்தமான் கைதியை நடத்தாத அமைச்சூர் சபைகளே இல்லையெனலாம். திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், தமிழரசுக் கழகம் இன்னும் சமுதாய முற்போக்குக் கொள்கைகளை ஆதரிக்கும் எல்லாக் கட்சியினரும் தமது நாடக சபைகளில் அந்தமான் கைதியை நடித்திருக்கின்றனார். நம்முடைய நண்பர் திரு ஏ.வி. பி. ஆசைத்தம்பி எம். எல். ஏ. அவர்கள் இதில் நடராஜன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக் குரியதாகும். இதற்கெல்லாம் மேலாகத் தமிழில் வெளிவரும் நாடக இலக்கியங்களுக்குப் பரிசு வழங்கும் முறையில் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் அந்தமான் கைதி நாடக நூலுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.