பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


அச்சமயம் தான்பிரீன் ஒரு பாதிரியாரைப் போல வேஷம் போட்டுக்கொண்டிருந்தான். பல புரட்சிக்கார்கள் பாதிரிவேஷம் பூணுவது அக்கால வழக்கம். அயர்லாந்தில் போலிஸார் பாதிரிமார்களிடம் பணிவுடன் நடப்பார்கள். ஆனால் புரட்சிக்காரர் பலரும் பாதிரிகளைப் போல் மாறு வேஷம் தரித்து வருகிற விஷயம் அவர்களுக்குத் தெரியும். யாரை உண்மையான பாதிரி என்றும் யாரைப் போலிப் பாதிரி என்றும் நம்புவது? அவர்கள் ஒருவரையும் தடுத்துக் கேள்வி கேட்க விரும்பவில்லை. ஏனெனில் உண்மைப் பாதிரியை வழிமறித்தால் ஜனங்கள் மிகவும் கோபடைவார்கள். போலிப்பாதிரியை வழிமறித்தால் துப்பாக்கிக்குப் பலியாக நேரும்!

டப்ளினில் இருந்தபோது ஒருசமயம் தான்பிரீன் மேனுத் என்ற இடத்திற்குப்போக நேர்ந்தது. வழியில் அவனுடைய சைக்கிளில் ஒரு சக்கரத்தில் காற்று இறங்கி ரப்பர் சக்கரம் சிறிது கிழிந்தும் போய்விட்டது. அதை ஓட்டுவதற்கு ரப்பர் துண்டும் பசையும் தேவையாயிருந்தன. அவன் சைக்கிள் கடைக்குச் சென்று ஒட்டித்தரும்படி கேட்டான். சிலமணிநேரம் காத்திருந்தால்தான் முடியும் என்று கடைக்காரன் சொன்னான். பக்கத்தில் மேனுத் கலாசாலையிருப்ப தாயும், அங்கே இளம்பாதிரிமார்கள் படித்து வருவதாயும். அவர்களிடம் போனால் ஒட்டித்தருவார்கள் என்றும் தெரிவித்தான். போலிப் பாதிரியான தான்பிரின் உண்மைப் பாதிரியார்களின் முன் எப்படிப் போக முடியும் கடைக்காரனிடம் கோபப்பட்டுக் கொண்டு எங்கே செல்வதென்று தான்பிரீன் யோசித்தான். ஆபத்துக் காலத்தின் போலிஸாரே தனக்கு உதவி செய்வது வழக்கம் என்பது அவன் ஞாபகத்திற்கு வந்தது. உடனே பக்கத்திலிருந்த போலிஸ் நிலையத்திற்குச் சென்றான். அங்கு சென்றதும் காவலிலிருந்த போலிஸ்காான் முன்னால் ஓடிவந்து 'சலாம்' செய்தான். பாதிரியும் மிகுந்ததாாாள விந்தையுடன் ஆசிர்வதித்து, வந்த காரியத்தைக் கூறினான். உடனே பல போலிஸாரும் ஓடிவந்து சைக்கிள் சக்கிரத்தில் கிழிந்த இடத்தை ரப்பரை ஒட்டிக் காற்றடைத்துக் கொடுத்தனர். அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, பாதிரி, நிலையத்துள் சுவரில் ஒட்டப்பட்டிருந்த அச்சிட்ட அறிக்கைகளை ஜன்னல் வழியாகக் கவனித்துப் பார்த்தான். அவற்றில் ஒன்றில் பின்கண்டவாறு எழுதப்பட்டி ருந்தது:

போலிஸ் நிலையம்
1000 பவுண்டு இனாம்
அயர்லாந்தில் கொலை செய்த கொலைகாரன் தேவை!
டானியல் பிரீன் (தான்பிரீன்)
மூன்றாவது திப்பெரரித்தொண்டர் பட்டாளத்தின் தளகர்த்தர்
என்று அழைக்கப்படுகின்றவர்

92