கி. ஆ. பெ. விசுவநாதம்
9
திருவள்ளுவர் கருத்துக்களைக் கூறும் முறை ஒரு தனி முறை, அது ஒன்றை மிகமிக உயர்த்திக் கூறி மற்றொன்றால் அதை அழித்துக் காட்டுவது; இராவணனின் வீரத்தைப் புகழ்வதெல்லாம் இராமனின் வீரத்தை உணர்த்தவே என்பதுபோல.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந் துறும்" (380)
வள்ளுவர் ஊழின் வலிமையை மிகமிக உயர்த்திக் காட்டியிருப்பதெல்லாம், முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே, இவ் வுண்மையை.
"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" (620)
என்ற குறளால் அறியலாம்.
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை" (247)
என்றும்,
"பொருள் அல்லவரை ஒரு பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்" (751)
என்றும்,
"அறம் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்" (754)
என்றும், பொருட்செல்வத்தை மிகமிக உயர்த்திக் கூறியிருப்பதெல்லாம், அருட்செல்வத்தின் உயர்வைக் காட்டுவதற்காகவே,