பக்கம்:எழில் விருத்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வாணிதாசன்

அவற்றோடு 'நயமிகு சொல் வடிவம்' (Image) ஐம்பொறிகள் வாயிலாக ஒருவன் நகர்ந்து பெறத்தக்க கருத்துக்களை உணரச் செய்யும் ஆற்றலுடையது. இவ்வியல்புகள் கவிஞர் வாணிதாசனாருடைய கவிதையில் நிறைந்து ஒளிர்கின்றன.

"காக்கைநிற நள்ளிரவே" - 11:7

“குளத்தினிலே தாமரைகள்
தமிழ் மன்னர் கூட்டம்!” - 10:5

"தைத்திங்கள் குளம்பூத்த பூவோ விண்மீன்?
தமிழ்வேந்தர் வெளியிட்ட சின்னக் காசோ?" -92

"சோலையாம் கோட்டையின் உள்ளே
தூண்களாம் மா பலா தென்னை" - 6:7

".....தனிமனிதன் நல்வாழ்வு
   சரியும் என்றே
அழைப்பளித்தே பாழடைந்த
   கோட்டைமதில் அறிவுறுத்தும்" - 3:5

"ஒன்று கேட்பேன். கோட்டான் போல்
உனக்குப் பகலில் கண்குருடோ?" - 2.2

இத்தகைய சிந்தைக்கினிய சொற்சித்திரங்களைத் தீட்டியுள்ள கவிஞரின் பாடல்களைப் படிக்கின்ற பொழுது உணர்ச்சி பொங்கியெழுவதை, இழுமெனும் ஒலிநயம் நம்முடைய காதுகளில் எதிரொலிக்கின்றது. இவற்றோடு தமிழ்மொழிப் பற்றும், தாய்நாட்டின் பற்றும் 'எழில் விருத்தத்தில்' ஏறுநடை போட்டுச் செல்லுவதை நாம் கண்டு மகிழலாம்