இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சின்ன அண்ணாமலை
147
சிவாஜி என் அருகில் வந்து, “என்ன நண்பரே, முகத்தில் அசடு வழிகிறதே, இந்தக் கைக்குட்டையால் துடைத்துக் கொள்ளுங்கள்” என்று தன் கைக் குட்டையை என்னிடம் கொடுத்தார்.
மரியாதைக்கு அதை வாங்கி பின்னர் அவரிடமே அதைத் திருப்பிக் கொடுத்தேன். அதனால் அவர் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.