த, கோவேந்தன் 63
ஆனால், என்னிடம் சோர்வே இல்லை.
சோர்வும் துன்பமும் என்றன் இருப்பிடத்திற்கு வர
முடியாது.
என் இருப்பிடம் தூய்மையான நெஞ்சம்.
நேர்மை மிக்க மனமே எனது ஆலயம்,
குற்றமற்றவர்களின் வாழ்வே புனிதமான எனது உறைவிடம்.
மாணவன் : உங்கள் இருப்பிடத்தில், உங்கள் ஆல் யத்தில்;
உங்களைத் தஞ்சம் அடைகின்றேன்.
ஆம்! உங்கள் புனித உறைவிடத்திலும்தான்்.
ஆசான் : தூய்மையான நெஞ்சத்தில் ஆசைக் கறைப் படிவதில்லை;
நேர்மையான மனம், வெறி உணர்ச்சியினால் தூண்டப்
படுவதில்லை.
குற்றமற்ற வாழ்வில் தன்னலம் பற்றிய எண்ணமே இல்லை;
உனது நெஞ்சத்தைத் தேடிப் பார்த்து உண்மையைப் பின்தொடர்வாய்.
ஆசை, வெறி உணர்வு, தற்புகழ்ச்சி இவற்றிற்கான தன் ன லத்தை விலக்கி வை.
அவற்றை மறு; வெற்றி பெறு; விட்டுவிடு.
அவற்றின் சாயலோ, ஒரு சிறு பகுதியோ உன்னுடன் இருக்கவே கூடாது,
ஏனெனில், எல்லாத் தடுமாற்றங்களுக்கும் அவையே பொறுப்பானவை.