இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொழிலாளர் துயர் துடைப்பீர்!
தொழிலாளர் துயர்துடைப்பீர்-துன்ப மறைப்பீர்
(தொழி)
அழியாத துன்பநோயில்
அண்டிப்பிழைக் கும்வாயில்
மயலெல்லாம் கொண்டுநின்றதே-மாநிலமதில்
(தொழி)
நாட்டினில் எந்தநாளில்
நாடினர் நல்லவாழ்வு
வாட்டமே குடிகொண்டதே-வரம்புமுண்டோ
(தொழி)
நாள் முழுதும் உழைத்தும்
நன்குபயன் அளித்தும்
ஏழ்மை அகன்றதில்லையே-இங்நிலத்தில்
(தொழி)
நாட்டிலே உள்ளகட்சி
நாட்டமே வைப்பதில்லை
வாட்டமாய் வாடுகின்றனர்-வளம்பெறவே
(தொழி)
நெயிலிடை வெண்ணெயென
வெந்து உருகிநிற்பார்
ஒய்யெனக் காப்பாரில்லையே-ஒன்றுகூடியே
(தொழி)
ஒடி ஒடி உழைத்து
உடம்பை மிகவருத்தி
பாழுக்கிறைத் தாராகுறார்-பார்மீதினிலே
(தொழி)
143