இயற்கை
அப்பப்பா இவ்வாண்டில் அரசியலார் மக்களுக்கு
ஆக்கம் செய்ய
இப்பொழுதும் எண்ணிலரே இறையிலியாநிலங்களையும்
இயற்றி டாரே!
எப்பொழுது இப்பஞ்சம் எமை நீங்கும் காலமெனும்
எழிலோய் உன்னை
இப்புவியில் யாவருமே பழிப்பதுவும் உன் செவியில்
ஏறி டாதோ!
7
மக்களது வருத்தமிகு கண்ணீரும் மனங்கசிந்து
மடிந்து வாடும்
துக்க நிறை பசுக்களது கண்ணீரும் தூயநலச்
செடிக ளெல்லாம்
புக்கு நிலை உயராது புலம்பிமடி கண்ணீரும்
புவியி லின்று
மிக்க பெருந் தண்ணிராய் ஓடுவதே அன்றி பிற
உண்ணீ ருண்டோ!
8
ஆவணியாம் மாதத்தில் அரிய வயல் நிலைகளெல்லாம்
அந்தோ அந்தோ
பூவணியும் விழாவினைப்போல் பொலிந்திருக்க வேண்டுவது
போயே இங்கு
வாவிகளும் சோலைகளும் வளமற்று வாடுவதும்
வருத்தம் ஐயா!
தேவர்களிற் றேவனது செருச் செயலோ
அன்றி இவர் செய்த தென்னோ
9
129