254
234
தடவா ரிதியில் துயிலமுதே
தமியேற் கருள்வாய் பெருவாழ்வே. '
என்ற பாடலில் அவதார மகிமை, அந்தர் யாமித்துவத்தின் சிறப்பு, அர்ச்சையாயிருக்கும் தனிச்சிறப்பு ஆகிய வற்றைக் கண்டு மகிழலாம்.
"அருள்மிகும் உள்ளத் தந்தணர் மறையோ தார்ப்பும்வா னவர்துதி முழக்கும் தெருள்மிகுங் கவிவல் லோர்துதி யொலியும்
தேக்குறு தூயகின் செவிகட்கு இருள்மிகும் அகத்தேன் புகன்றிடு புன்சொல்
ஏற்குமோ? கராசலங் காத்தோய்! பொருள்மிகும் அறிஞர் கிரந்தரம் பணியும் புயங்கமால் வரையமா தேவே. * என்ற பாடலில் ஆசிரியரின் பக்தி புலவைதைக் காணலாம்.
ஆழ்வார்களின் பாடல்களைப்போல் கைச்சியாது சந்தானமாகப் பாடப்பெற்றுள்ள பல பாடல்களாலும் ஆசிரியரின் பக்தியநுபவம் கொழிப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக,
'அருந்தவம் வழுத்து கின்னடி மலரை அலர்கொடு பூசைசெய் தறியேன் திருந்திழை மடவார் தம்மையே புகழ்வேன் தேவனே எங்ங்ணம் அருள்வாய் கருந்துழாய்க் கண்ணி கமழ்மறு மார்பா
கடையுகத் தாலடை துயில்வோய்
251. பாடல்-6 252. பாடல்-22