இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27
கண்ணன் போலக் கீதை மொழியில் பேசினான்.
"இது கொடுமை ; பெண் அடிமை அல்லள்; தவறு செய்வதற்கு அவளுக்கு
வாய்ப்பு உண்டு.
இழுபறி நிகழ்வது தவிர்க்க இயலாது ; நீ தவறு செய்யாதே அது உனக்குப் பெருமை" என்று அறிவுரை தந்தான்.
கற்பு என்று சொல்லி மகளிரை அடக்குவது அவர்களை ஒடுக்குவது அறியாமை; தெரியாமை.
அதை இருவர்க்கும் பொதுநிலை வைப்போம் என்று கூறுவது உயர்வு.
தவறு செய்வதற்கு இருவர்க்கும் வாய்ப்பு உண்டு; அதை வைத்துப் பிரிவு தேவை இல்லை" என்றான்.
அவன் அறிவுரையைத் தவசியால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை; என்றாலும் அவள் தனக்குத் தேவைப்பட்டாள்