121
ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு இபுறாஹீம் (அலை) அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை இறையடியார்கள் ஏற்று இன்றும் அதை நிறைவேற்றி வருகிறார்கள்.
ஐப்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் இறுதிக் கடமையாக இஃது அமையலாயிற்று. ‘ஹஜ்’ என்ற அரபுச் சொல்லுக்கு ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும்.
உலக முதல் இறையில்லம்
கஃபா மக்கா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இறையில்லமாகும். முதல் மனிதரான ஆதாம் இறை வணக்கம் புரிவதற்கென உருவான இவ்விறையில்லம் தியாக சீலர் இப்ராஹீம் (அலை) நபிகள் நாயகம் போன்ற வர்களால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகும்.
கஃபா என்ற அரபுச் சொல்லுக்கு வட்ட வடிவானது என்பது பொருளாகும். சதுரமானது என்ற பொருளும் உண்டு. வட்ட வடிவிலான பரந்த வெளியில் சதுர வடிவில் அமைந்துள் கட்டடமே கஃபா இறையில்லமாகும்.
கருங்கற்களால் கட்டப்பட்ட இக் கட்டடம் 40 அடி நீளமும் 25 அடி அகலமும் 50 அடி உயரமும் கொண்டதாகும். 7 அடி உயரத்தில் நுழைவாயில் ஒன்றுள்ளது. அதனுள் எதுவுமே இல்லை. ஒரே வெற்றிடம். ஆண்டிற்கு இரண்டொரு முறையே இந்நுழைவாயில் திறக்கப்படுகிறது. இதனுள் இறைவணக்கம் புரியக்கூடாது என்பது விதி. இக் கட்டடத்தின்மீது வெள்ளி, தங்க ஜரிகைகளால் திருக்குர் ஆன் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கருப்பு நிறப்பட்டுத் திரை போர்த்தப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள 125 கோடி முஸ்லிம்கள் கஃபா இறையில்லம் இருக்கும் திசையை நோக்கியே ஐவேளை தொழுவர். ஆனால் கஃபா இறையில்லத்தில் தொழுகை புரிவோருக்கு திசைக் கட்டுப்பாடு ஏதுமில்லை. கஃபாவைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நின்று இறைவணக்கம் புரிவர்.