பூங்கொடி
135
140
145
150
155
கின்புடன் விடைகள் இறுப்பது தும்கடன் ; துன்புகள் நும்மைத் தொடரா உறுதி , வன்பகை இறந்தோற்கு வாய்த்ததும் இல்லை : பின்பவன் தற்கொலை புரிந்ததும் இல்லை : செயப்படு கொலையெனச் செப்பலும் செய்தீர்; நயத்தகும் மன்றினுள் நல்லவள் பூங்கொடி சண்டிலி தன்துணை கொண்டு வதிவதும் விண்டனிர் ; இவற்றால் விளங்குவ தென்னே? ஒண்டொடி மகளிர் ஒருவர்மேல் ஐயம் உற்றனிர் கொல்லோ மற்றிவர் இருவரும் குற்றம் புரிதல் கூடுமென் றெண்ணம் பெற்றனிர் கொல்லோ? தெற்றென மொழிக
மாணவன் துடிப்பு
என்று ைகேட்டோன் ஈதென் கொடுமை? நன்றுரை புகன்றீர் நானதற் கொருப்படேன் கொன்றெனைச் சிதைப்பினும் கூறேன் அம்மொழி; பயிற்றிய தாயின் பால்முகம் நோக்கின் அயிர்த்தலும் ஒல்லுமோ? ஐயகோ அடாஅது ! பாழ்மகன் இறந்தும் பழியினைத் கந்தனன் ; ஆழ்கடல் உலகில் அவள்கிகர் பெண்மகள் சூழினும் காண்கிலம் , தாயவள் கனக்குத் தாழ்வுகள் வருதல் தகுமோ ஐய! ஊழ்வினே என்றாென் றுளதெனச் செப்புவர் பாழ்வினே யிங் தப் பழிமொழி வடிவிற் சூழ்ந்தது கொல்லோ? குழ்ந்தது கொல்லோரி : என்றவன் அாற்றி யிரங்கித் துடிக்க;
172