பீரு முகம்மது

விக்கிமூலம் இலிருந்து

பீரு முகம்மது

  • ஞான ரத்தினக் குறவஞ்சி
  • பக்கம் 252 - 256

காப்பு[தொகு]

• தரவு கொச்சகக் கலிப்பா

பொன்னுலகு பொருந்துமனப் பொருள் அறியத் தானம் அறிய
மின்னுலகில் மெய்ஞ்ஞானம் விளங்குற வஞ்சிதனை
உன்னாமல் தன்னினைவின் உன்னி யுதிப் பொருநான் காய்த்
தன்னிறையைத் தன்னினைவாய்த் தரிப்பதுவே காப்பாமே

கண்ணிகள்[தொகு]

1[தொகு]

ஆதிக்கு முன்னம நாதியு மென்னடிசிங்கி
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா

2[தொகு]

ஆதியாய் வந்த அரும்பொருளேதடி சிங்கி
சொதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா

3[தொகு]

சோதியி லாதி சொருபமான தெப்படி சிங்கி
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா

4[தொகு]

முப்பொரு ளென்று நீ முன் சொன்ன தாரடி சிங்கி
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா

5[தொகு]

எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி
அப்பன் தன் னட்புக்கு ஒப்பிய தாயாலே சிங்கா

6[தொகு]

பராப ரத்தினிற் பஞ்சவன் னமேது சிங்கி
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா

7[தொகு]

ஒன்றுக்குள் ஐவர்கள் உண்டானதெப்படி சிங்கி
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா

8[தொகு]

மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடி சிங்கி – அது
நாதத்தில் ஐம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா

9[தொகு]

மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார் சிங்கி – அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினைவடா – சிங்கா

10[தொகு]

மூலக் கிழங்கு முளைத்திடம் எவ்விடம் சிங்கி – அது
நாதத்திலான நடுநிலை யல்லவோ சிங்கா

11[தொகு]

முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடம் சிங்கி – அது
மூளைமுனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா

12[தொகு]

முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா

13[தொகு]

இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி – அது
இந்த வுடலுக்கு யிராதி மூலமே சிங்கா

14[தொகு]

இந்த வுடலுக் குயிர் வந்ததெப்படி சிங்கி – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா

15[தொகு]

இந்த வுடலுக் குயிரெங்கே நின்றது சிங்கி – அது
அந்தர மாயண்ட மாக்கொடி யல்லவோ சிங்கா

16[தொகு]

இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி – அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா

17[தொகு]

மாக்கொடி என்பதை மானிடர் என் சொன்னார் சிங்கி
மட்டில் அடங்காத மாகலி மாவடா சிங்கா

18[தொகு]

எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி – அது
எல்லா முடிந்த பொருள் வழியாமடா சிங்கா

19[தொகு]

முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி – அது
முன் சுடர் மூன்றும் உடலுயிர் ஆத்துமா சிங்கா

20[தொகு]

பின்னே ரறிவர்கள் ஒன்றான தெப்படி சிங்கி – அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா

21[தொகு]

ஆசை கொண்டு நம்மை யாட்டுவாராரடி சிங்கி – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா

22[தொகு]

ஆசை பாசப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா

23[தொகு]

தன்னை அறியுந்தலமேது சொல்லடி சிங்கி – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா

===24---

என்னவிதமாகத் தன்னை யறிவது சிங்கி – அது
தன்னவன் தாய்தந்தை யாகி நாமானது சிங்கா

25[தொகு]

இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி – அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா

26[தொகு]

தன்னுள் விளங்கும் தவமென்ன சொல்லடி சிங்கி – அது
தன்னை மறந்து தவத்தில் இருப்பது சிங்கா

27[தொகு]

என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி – அது
ஒன்றைப் பொருந்தி யொடுங்கியிருப்பது சிங்கா

28[தொகு]

என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி – அது
எல்லா மறந்து இருளா யிருப்பது சிங்கா

29[தொகு]

ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி –அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா

30[தொகு]

கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி – சில
உன்னி யெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா

31[தொகு]

எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா

32[தொகு]

அண்ணிணு மெண்ணும் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா

33[தொகு]

ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா

34[தொகு]

ஆணியாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி – முன்
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா

35[தொகு]

இந்தப் பொருள் வந்ததெந்த வழியடி சிங்கி – அது
அந்தக் கதிர்மதி வந்த வழியடா சிங்கா

36[தொகு]

கத்த னொளிவு கலந்திடம் எவ்விடம் சிங்கி – அது
அத்தன் நடனந்தான் ஆடிய தற்பரஞ் சிங்கா

37[தொகு]

உத்தம்பஃ பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி – வழி
நச்சரவாடும் நடுநிலை யல்லவோ சிங்கா

38[தொகு]

எட்டெழுத்தாக எழுந்தெழுத் தென்னடி சிங்கி – அது
மட்டி லடங்கா வடிவட்ட கோணமே சிங்கா

39[தொகு]

அஞ்செழுத்தாக அமைந்தெழுத் தென்னடி சிங்கி – அது
அஞ்சும் பொருந்திய ஆகாய வட்டமே சிங்கா

40[தொகு]

அன்பத்தோ ரட்சரம் அறிய நீ சொல்லடி சிங்கி – அது
வஞ்ச மகார நடுச்சுழி மூன்றுமே சிங்கா

41[தொகு]

கற்பக வாசி கலந்திடம் எவ்விடம் சிங்கி – அது
உற்பன மூலத்தி னுள்ளளொளி யல்லவோ சிங்கா

42[தொகு]

சத்தம் பிறந்திடும் சற்குரு வேதடி சிங்கி – அது
உற்ற சுவாசம் உயிர்நிலை யல்லவோ சிங்கா

43[தொகு]

கண்டு தொழுஞ்சிவ காரண மேதடி சிங்கி – நம்மை
உண்டு படுத்திய உள்ளொளி யானதே சிங்கா

44[தொகு]

எப்படிக் கண்டே இறையை வணங்கலாம் சிங்கி – அது

நட்புடன் இரண்டு நடுநிலை காண்பது சிங்கா

45[தொகு]

நடுநிலை யானதை நாடுவதெப்படி சிங்கி – அது
நாட்டந் தேட்ட மோட்ட மாட்ட மொன்றாயினால் சிங்கா

46[தொகு]

தேட்டமு நாலுந் திருந்துவ தெப்படி சிங்கி – அது
திருவைப் பொருந்தி ஒருமித் திருப்பதே சிங்கா

47[தொகு]

ஒருமித் திருக்கின்ற ஓரிட மெவ்விடம் சிங்கி – அது
ஒன்றாம் இரவும் பகலும் உதிப்பிடம் சிங்கா

48[தொகு]

இரவும் பகலும் ஒன்றானது மெவ்விடம் சிங்கி – அது
எப்போதும் இருளாய் இருப்பது மூளையே சிங்கா

49[தொகு]

இரவும் பகலும் பிறப்பிட மெவ்விடம் சிங்கி – அது
இருளில் உதித்துன்னி வந்தத டிமூலம் சிங்கா

50[தொகு]

இரவும் பகலும் மெழுந்திடம் எவ்விடம் சிங்கி – அது
ஏகாந்த உன்னல்வந்து ஏறிய தாமரை சிங்கா

51[தொகு]

இரவும் பகலும் பிறந்திடம் எவ்விடம் சிங்கி – அது
எழுந்தறு கோணம் இடம்வலம் வாசியே சிங்கா

52[தொகு]

இரவும் பகலும் நின் றாடிய தெவ்விடம் சிங்கி – அது
எழுந்து நின்றாடுஞ் சுழுமுனை மண்டலம் சிங்கா

53[தொகு]

இரவும் பகலும் இருப்பிடம் எவ்விடம் சிங்கி – அது
ஈராறு மோடிய வோரான நான்கடா சிங்கா

54[தொகு]

இரவும் பகலும் உதிப்பிடம் எவ்விடம் சிங்கி – அது

ஏறுமெட்டங்குல மிருவிழி நடுநிலை சிங்கா

55[தொகு]

இரவம் பகலுமென் றென்னதைச் சொல்லலாம் சிங்கி – அது
இரவு பகலிடை பிங்கலை வாசியே சிங்கா

56[தொகு]

இடைகலை பிங்கலை என்னத்தைச் சொல்லலாம் சிங்கி – அது
இடைகலை சந்திரன் பிங்கலை சூரியன் சிங்கா

57[தொகு]

என்னத்தைச் சொல்லலாம் சந்திரன் சூரியன் சிங்கி – அது

கலையும் பொருந்தும் நடுச்சுழு முனையே சிங்கா

58[தொகு]

சந்திரன் சூரியன் ஒன்றான தெவ்விடம் சிங்கி – அது
கலையும் பொருந்து நடுச்சுழு முனையே சிங்கா

59[தொகு]

என்னத்திலே பாலனேறி நின்றாடுது சிங்கி – அது
உன்னுக்குள் வாசி நடனப் புரவிமேற் சிங்கா

60[தொகு]

என்ன விதமாய் எடுத்துநின் றாடலாம் சிங்கி – அது
ஏற்றவும் மாற்றவும் இணங்கி நின்றாடிப்பார் சிங்கா

61[தொகு]

மாற்றிப் பிடிக்க மருந்தென்ன சொல்லடி சிங்கி – அது
மாளாமல் மாண்டு மறைந்து இருப்பதே சிங்கா

62[தொகு]

அட்டகசங்கள் அறிந்திட மெவ்விடம் சிங்கி – அது
எட்டு விதமா யெழுதும் பலனடா சிங்கா

63[தொகு]

உற்றஞானப் பொருள் உத்தியாய்ச் சொன்னதார் சிங்கி – அது
உத்தமர் பீருமுகம்ம துரைத்தது சிங்கா

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பீரு_முகம்மது&oldid=493277" இலிருந்து மீள்விக்கப்பட்டது