எனது நாடக வாழ்க்கை/சீர்திருத்த நாடகாசிரியர்

விக்கிமூலம் இலிருந்து
சீர்திருத்த நாடகாசிரியர்

திருப்பூரில் நாடகங்கள் நடந்துகொண்டிருந்தபொழுது, சீர் திருத்த நாவல் நாடகாசிரியர்’ எனப்புகழ்பெற்ற திரு எம் கந்தசாமி முதலியார் எங்கள் கம்பெனிக்கு வந்துசேர்ந்தார். முதலியா ரோடு அவரது புதல்வரான நடிகமணி எம். கே. ராதாவும், மற்றொரு சிறந்த நடிகரான கே கே. பெருமாளும் வந்தார்கள். ஏற்கனவே நடந்து வந்த இராஜாம்பாள் நாடகம், ஆசிரியர் முதலியார் வந்ததும் புதுமை பெற்றது. கந்தசாமி முதலியார் சென்னை சுகுண விலாச சபையில் பெண் வேடநடிகராக இருந்தவர். பம்மல் சம்பந்த முதலியாரிடம் பயிற்சி பெற்றவர். பாலாம்பாள் கம்பெனி, பி. எஸ். வேலுநாயர் கம்பெனிகளுக்கெல்லாம் பம்மல் முதலியாரின் மனோஹரன் நாடகத்தை இவர்தான் சொல்லி வைத்தார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நீண்டகாலம் இருந்தார். ஜே. ஆர். ரங்கராஜூவின் இராஜம்பாள், இராஜேந்திரா, சந்திரகாந்தா, ஆனந்த கிருஷ்ணன் ஆகிய நாவல்களையெல்லாம் நாடகமாக்கி அரங்கேற்றினார். இவரை எங்கள் ஆசிரியராகப் பெற்றது பெரும் பாக்கியம் என்றே கருதினோம். திருப்பூர் நாடகம் முடிந்து கம்பெனி பாலக்காடு சென்றது.

புதிய நாடகங்கள்

பாலக்காடு வந்ததும் பம்மல் சம்பந்தனரின் இரத்தினாவளி பாடம் கொடுக்கப் பெற்றது. அப்போது எங்கள் கம்பெனியில் எஸ். என். இராமையா, மனோகரனத் தவிர மற்றெல்லா நாடகங்களிலும் கதாநாயகனுக நடித்து வந்தார். இரத்தினவளியில் வத்சராஜன் பாடம் மிகவும் அதிகமான வசனங்கள் உள்ளது. அதை இராமையாவுக்குக் கொடுக்க வாத்தியார் விரும்பவில்லை. “வுண்முகம்தான் வேண்டும்” என்று வற்புறுத்தினார். வத்சராஜன் பாடம் எனக்குக் கொடுக்கப்பெற்றது. பாலக்காடு அமிட்டி ஹாலில் இரத்தினுவளி நாடகம் அரங்கேறியது. எம். கே. ராதா வசந்தகளுகவும், கே. கே. பெருமாள் பாப்ரவ்யளுகவும், என். எஸ். கிருஷ்ணன் டாம்ரவ்யனுகவும், சிறப்பாக நடித்தார்கள். சின்னண்ணா வாசவதத்தை இரத்தினவளி பாத்திரத்தை இரு பகுதிகளாகப் பிரித்து, முற்பகுதியைச் சேதுராமனும் பிற் பகுதியைச் செல்லமும் நடித்தார்கள். நாடகம் மிகவும் நன்றாய் இருந்ததாக அனைவரும் சொல்லிக் கொண்டார்கள்.

தம்பி பகவதி அதுவரை பபூன் வேடமே புனைந்து வந்தான். வாத்தியார் வந்ததும் அவனுக்கு வேறு வேடங்களும் கொடுக்கப் பட்டன. மனோஹரனில் ராஜப்பிரியன் வேடம் கொடுத்து, நன்முக நடிப்பும் சொல்லிக் கொடுத்தார். விளம்பரங்களிலும் அவனைப்பற்றித் தனியாகக் குறிப்பிட்டு எழுதினார். இராஜாம்பாள் நாடகத்தில் நான் வக்கீலாகவும், பகவதி பாரிஸ்டராகவும் நடிப்போம். கடைசியாக நடைபெறும் நீதிமன்றக் காட்சியில் ஆங்கிலத்தில் எனக்கும் பகவதிக்கும் வசனம் எழுதிக்கொடுத்தார். ஆங்கிலத்தை தாங்கள் தமிழிலேயே எழுதி நெட்டுருப் போட்டோம். ஆங்கிலம் நன்முக அறிந்தவர்கள் பேசுவதைப்போல் அந்த வசனத்தைப் பேசவும் எங்களுக்குப் பயிற்சி கொடுத்தார். நானும் பகவதியும் ஆங்கிலத்தில் பேசியதை ரசிகர்கள் பெருத்த கரகோஷம் செய்து வரவேற்றார்கள்.

இராஜேந்திரா

பாலக்காடு முடிந்து, கோயமுத்துர் சென்றதும் இராஜேந்திரா நாடகம் தயாராயிற்று. இராஜேந்திரா ஒரு சமூகச் சீர்திருத்த நாடகம், வரதட்சணையின் கொடுமையை உயர்ந்த முறையில் எடுத்துக் காட்டும் நாடகம். 1922ல் பாவலர் கம்பெனிக்குப் போன சமயம் வேஷத்தை நிறுத்திய பெரியண்ணா டி. கே. சங்கரன், நாவல் நாடகங்கள் தயாரானதும் வேடம் புனையத் தொடங்கினார். இராஜேந்திரனில் பெரியண்ணாவுக்கு ராகவன்வேடம் கொடுக்கப் பெற்றது. நான் ராகவனின் மகள், லட்சுமியாக நடித்தேன். ஒரு படுகொலையை நேரில் பார்த்ததால், லட்சுமிக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. அது மிகவும் சிரமப்பட்டு நடிக்க வேண்டிய காட்சி. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு வாத்தியார் எனக்குப் பிரத்தியேகப் பயிற்சி அளித்தார். லட்சுமியின் காதலன் ரங்கநாத், ஒரு காதல் காட்சியில் மகாகவி ஷேக்ஸ்பியர் சங்கீதத்தைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வரிகளை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ரங்கநாத்தாக நடித்த ராமையாவுக்கு ஆங்கிலத்தில் பேச வரவில்லை. எனவே அந்த வசனத்தை லட்சுமியே பேச வேண்டியதாயிற்று. “மகாகவி ஷேக்ஸ்பியர் சொல்லுகிறார்”...என்று சொல்லத் தொடங்குவார் ராமையா. உடனே நான் இடைமறித்து, “ஒ, அதுவா? எனக்குத் தெரியுமே” என்று ஷேக்ஸ்பியரின் கவியைச் சொல்லி முடிப்பேன். ராமையா பேச வேண்டிய வசனத்தைத்தான் நான் பேசுகிறேன் என்று ரசிகர்கள் எளிதாகப் புரிந்து கொண்டார்கள். நாடக அரங்கேற்றத்தன்று, இந்த ஆங்கில வசனத்தை நான் பேசி முடித்து ராமையா மீண்டும் பேசத் தொடங்கியதும் ரசிகர்கள் கைதட்டி வரவேற்றார்கள்,

வரதட்சணையின் கொடுமை

இராஜேந்திரனாக எம். கே. ராதாவும், ருக்மணியாகச் சின்னண்ணா டி. கே. முத்துசாமியும் அற்புதமாக நடித்தார்கள். இராஜேந்திரனில் முக்கியமான கட்டம் இது: கோபாலாச் சாரியின் சூழ்ச்சியால் சிற்றன்னை ரங்கம்மாள், ருக்மணிக்கு மயக்க மருந்தைப் பாலில் கலந்து கொடுத்து விடுகிறாள். ஸ்ரீ ரங்க நாதரைத் தரிசித்து வரலாமென்று போக்குக் காட்டி ஆலயத்துக்கு அழைத்து வருகிறாள். வருகிற வழியில் ருக்மணிக்கு மயக்கம் வந்து விடுகிறது. உடனே அருகிலிருக்கும் கோபாலாச் சாரியின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அங்கு ருக்மணியைப் படுக்க வைக்கிறார்கள். கோபாலாச்சாரியின் திட்டப்படி அங்கே காத்திருக்கிறான் இராஜேந்திரன். ருக்மணியைத் தனியே அறையில் கட்டிலில் கிடத்திவிட்டு ரங்கம்மாளும், கோபாலாச் சாரியும் மறைகிறார்கள். ருக்மணி மயக்கமாயிருக்கும் அந்நிலையில் இராஜேந்திரன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறான். இளமையின் வெறி அடங்கியதும் அவன் உள்ளத்திலுள்ள நல்லுணர்வுகள் மேலெழும்புகின்றன. மனச்சாட்சி அவனைக் கண்டிக்கிறது. ஒழுக்கத்தை உயிரென மதிக்கும் அந்த இளம் பெண், உணர்வு பெற்றுத் தன் அலங்கோல நிலையைக் கண்டு தற்கொலை செய்து கொள்ளக் கூடாதே என்று எண்ணாகிறான், அவளிடம் மன்னிப்புக் கேட்கத் துடிக்கின்றான். தற்கொலை செய்து கொள்ளக் கூடாதென்று அவளிடம் வாக்குறுதி பெற விரும்புகிறான். அவன் சிந்தனையில் மூழ்கித் தத்தளித்து நிற்கும் இந்த நேரத்தில், ருக்மணி கண்விழிக்கிறாள்; சுற்று முற்றும் பார்க்கிறாள்; சித்தி, தன்னை மோசம் செய்து விட்டதை உணர்ந்து ஆவேசம் கொள்ளுகிறாள்.

நடிப்புத் திறமைக்கே சவால்விடும் ஒர் அற்புதமான கட்டம் இது. இந்தக் காட்சியில் எம். கே. ராதாவும் சின்னண்ணாவும் அபாரமாக நடித்தார்கள். கற்பிழந்த அந்த நிலையில் நின்று, கதறி, அதனைச் சூறையாடிய அந்த இளைஞனைச் சபித்து, ஆவேசமாகப் பேசி, “ஐயோ, அம்மா, அப்பா” என்று அலறி ருக்மணி மூர்ச்சையடைகிறாள்.

சின்னண்ணா இந்தக் காட்சியில் மூர்ச்சித்து விழுந்ததும் சபையோர் மிகுந்த உணர்ச்சியுடன் பலமாகக் கைதட்டிப் பாராட்டினார்கள். காட்சியைப் பார்த்துக்கொண்டு, உள்ளே இருந்த எங்களுக்கெல்லாம் புல்லரித்துப் போய்விட்டது. காட்சி முடிந்ததும் வாத்தியார், சின்னண்ணா நடித்ததை அபாரமாகப் பாராட்டிப் புகழ்ந்தார்.

இராஜேந்திரனில் சிறந்த நகைச்சுவைப் பாத்திரம் கோபாலாச்சாரி. அந்தப் பாத்திரம் என். எஸ். கிருஷ்ணனுக்கே தரப்பெற்றது. என். எஸ். கே. அதைத் திறம்பெற நடித்து, வாத்தியாரின் பாராட்டைப் பெற்றார். தம்பி பகவதிக்கு, சீனிவாசன் வேடம் கொடுக்கப் பெற்றது. சீனிவாசன் ஒரு சின்ன வில்லன் பாத்திரம். அதில் பகவதிக்கு நல்லபேர். மிகச்சிறுவனாக இருந்ததால் அடிக்கடி ரசிகர்கள் கைதட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

கே. கே. பெருமாள், துப்பறியும் கோவிந்தகை நடித்தார். இராஜேந்திரனுக்காக ஸ்ரீரங்கம் கோவில், காளிவிக்ரஹம் முதலிய சில புதிய காட்சிகளையும் தயாரித்தோம். கோவை, வெரைட்டி ஹாலில் இராஜேந்திரன் நாடகத்திற்கு அபாரமான வசூலாயிற்று. கொட்டகை உரிமையாளர் திரு. வின்சென்டை வாத்தியாரே நேரில் கண்டு, சினிமாவுக்கு உபயோகிக்கும் ‘ஆர்க் லைட்டை'க் கொடுத்துதவும்படியாகக் கேட்டுக் கொண்டார், “வெரைட்டி ஹால் உரிமையாளர் வின்சென்ட் அவர்கள், அன்புடன் உதவிய சினிமா கார்பன் ஆர்க் லைட்டின் ஒளியில் எங்கள் அற்புதக் காட்சிகளைக் காணத் தவறாதீர்கள்” என்று ஆர்க் லைட்டைக் குறித்துத் தனியாக விளம்பரமும் செய்தார். நாடகம் நடைபெறும்போது ஸ்ரீ ரங்கம் கோவில், காளிவிக்ரஹத்தின் அருகே நடக்கும் கொலை, ருக்மணி பாங்க் ஆகிய முக்கிய காட்சிகளில், மெளனப் படம் காண்பிக்கும் அறையிலிருந்து ஆர்க் லைட்டின் வெளிச்சம் விதவித நிறங்களில் பளிச்சிட்டு ஒளி வீசும், ரசிகர்கள் அந்த நாளில் இந்தச் சாதாரணக் கலர் லைட்டை வியப்போடு பார்த்தார்கள். அந்த லைட் காண்பிக்கப்படும் போதெல்லாம் மசிழ்ச்சியோடும், ஆரவாரத்தோடும் வரவேற்றார்கள்.