எனது நாடக வாழ்க்கை/பாலாமணி-பக்காத் திருடன்

விக்கிமூலம் இலிருந்து
பாலாமணி - பக்காத்திருடன்


நாடகங்கள் தொடர்ந்து சிரிய ஊர்களில் நடை பெற்று வந்தன. விருதுநகரில் நாங்கள் இருந்தபோது மேனகா படத்தின் மற்றும் இரு பங்காளிகளான ஈரோடு முத்துக் கருப்பன் செட்டியாரும், கேசவலால்காளிதாஸ் சேட்டும் வந் தார்கள். வடுவூர் துரைசாமி ஐயங்காரின் பலாமணி - பக்காத் திருடன் நாவலைப் படமெடுக்கப் போவதாகவும் நாங்கள் நால் வரும் அதில் நடிக்க வேண்டுமென்றும் அழைத்தார்கள். எங்கள் நால்வருக்கும், எங்கள் குழுவிலுள்ள இன்னுஞ்சில முக்கிய நடிகர் களுக்குமாகச் சேர்த்து ஒன்பதியிைரம் ரூபாய்கள் தருவதாகக் கூறினார்கள். கம்பெனி வளர்ச்சியைக் கருதி இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டோம்.

சத்தியமூர்த்தியின் பெருந்தன்மை

அப்போது பண்டித ஜவர்ஹர்லால் நேரு தமது குடும்பத்தினருடன் விருதுநகருக்கு வருகை புரிந்தார். பிரமாண்டமான ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. உள்ளுர் காங்கிரஸ் கமிட்டியார் விரும்பியபடி அன்று நாங்களும் நாடகத்தை நிறுத்தி னோம். நேருவுடன் சத்தியமூர்த்தி ஐயரும் சுற்றுப் பயணம் செய்தார். தேசபக்தர் சத்தியமூர்த்தி ஒரு சிறந்த கலா ரசிகர். பம்மல் சம்பந்தனார் நாடகங்களில் நடித்தவர். மேனகா படம் சென்னை யிலே திரையிடப்பட்டபோது ஒரு நாள் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். படத்தில் “வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே” என்னும் மகாகவி பாரதியார் பாடலைச் சேர்ந்திருந் தோம். இந்தப் பாடல்தான் முதன்முதலாகத் திரைப்படத்தில் பாடப் பெற்ற பாரதியார் பாடல். இந்தப் பாடலைப் படத்தில் சேர்த்திருந்தது குறித்து, சத்தியமூர்த்தி வெகுவாகப் பாராட்டி

னார். அதன் பிறகு கரூரில் ஒருமுறை நான் அவரை கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருடன் சந்தித்தபோது மேனகா படத் தைப் பிரமாதமாகப் பாராட்டினார். அவரோடு எனக்கு ஏற்கனவே பழக்கமிருந்ததால் அவரது வேண்டுகோளின்படி நான் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரைமணி நேரம் பாரதி பாடல்களையும், ஜீவானந்தம் பாடல்களையும் பாடினேன். நான் பாடிக்கொண்டிருக்கும்போதே நேரு வந்துவிட்டார். அவரோடு திருமதி கமலா நேருவும் செல்வி இந்திராவும் வந்தனார். அதன் பிறகும் சில நிமிடங்கள் பாடும்படி சத்திய மூர்த்தி ஆணையிட்டார். நான் பாடிக் கொண்டிருக்கும் போதே எங்கள் நாடகக் குழுவின் சிறப்பையும் எங்கள் சமுதாய சீர் திருத்த நாடகங்கள், தேசீய நாடகங்கள் ஆகியவற்றைப்பற்றியும் நேருஜியிடம் சத்தியமூர்த்தி வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். காலஞ்சென்ற தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் பெருங் குணத்தைக் காட்டுவதற்காகத்தான் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டேன். நான் பாடி முடித்ததும் நேரு என்னை யழைத்து அருகிருத்திப் பாராட்டினார். என் உள்ளமெல்லாம் பூரித்தது.

பாலாமணி படம்

இம்முறை படத்தில் கிடைக்கும் வருவாய் முழுவதையும் கம்பெனிக்குக் காட்சிகள், உடைகள் தயாரிப்பதிலேயே செலவிட முடிவு செய்தோம். அதற்கு வசதியாகக் கம்பெனியை எட்டைய புரம் கொண்டு சென்றோம். இளைய ராஜா அவர்களின் சொந் தக் கொட்டகையில் சாமான்களையெல்லாம் போட்டு விட்டு, வேண்டிய ஏற்பாடுகள் செய்தோம்.

சிறுவர்களை மட்டும் அவரவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம். காட்சி அமைப்பாளர்கள் கொட்டகையி லேயே இருந்தார்கள். கணக்குப் பிள்ளை தர்மராஜு மேற்பார்வையாளராக இருந்து, எல்லாவற்றையும் கவனித்துக் கொண் டார். பெரிய நடிகர்கள் சிலர், படத்தில் நடிப்பதற்காக எங்க ளோடு வந்தார்கள். இவர்களில் எஸ். வி. சகஸ்ரநாமம், பிரண்டு ராமசாமி, டி.என். சிவதாணு,டி.பி சங்கரநாராயணன் ஆகியோரும் இருந்தனார். 

எஸ். வி. சகஸ்ரநாமம் பாலாமணி படத்தின் கதாநாயகன் எஞ்சிட் சிங்காக நடித்தார். சாண்டோ வி. கே. ஆச்சாரி, பக்காத் திருடனாக நடித்தார். சின்னண்ணா கதை வசனம் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றவர்கள் எல்லோரும் பல பாத்திரங்களை ஏற்று நடித்தோம். என். எஸ். கிருஷ்ணனையும் இந்தப் படத்தில் நடிக்கச் செய்ய வேண்டுமென்று பெரியண்ணா வற்புறுத்தினார். படாதிபதிகள் அதன்படி என். எஸ். கே. யை யும் ஒப்பந்தம் செய்தார்கள். அவரும் எங்களோடு பாலாமணி யில் நடித்தார்.

பாவேந்தர் பாரதிதாசன்

பாலாமணிக்குப் பாடல்கள் எழுதத் தமிழகத்தின் தன்னிக ரில்லாத புரட்சிக்கவினார் பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் ஈரோட்டுக்கு வந்து எங்களோடு தங்கினார். பாரதிதாசன் பாடல்களிலே உள்ளத்தைப் பறிகொடுத்தவன் நான். பாடல்கள் எழுத அவரை ஏற்பாடு செய்யும்படி நான்தான் படாதிபதிகளிடம் வற்புறுத்தினேன். கவிஞரோடு நெருங்கிப் பழகவும் உரையாடவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உயர்ந்த மேதைகளோடு பழகுவதென்பது ஒரு அரியகலை. காலமறிந்து மென்மை யாகப் பழக வேண்டும். அவர்களைப் புரிந்து கொண்டு பழக வேண்டும். புரட்சிக் கவினார் அப்படிப் பழகி உறவாட வேண்டிய பெரிய மேதை என்பதை அந்நாளிலேயே நான் புரிந்து கொண்டேன். சின்னண்ணா டி. கே, முத்துசாமிதான் படத்தின் சங்கீத டைரக்டர். பாரதிதாசன் அவரோடு நல்ல முறையில் ஒத்துழைத்தார். பாலாமணிக்குரிய பாடல்கள் அனைத்தும் ஈரோட்டிலேயே எழுதப் பெற்றன.

திரைப்படங்களுக்குப்பாடல்கள் எழுதுவதிலே புரட்சிக்கவிஞருக்கு உற்சாகமில்லை. மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக ஏதோ எழுதினார். பாடல்கள் எழுத உட்காருவார், இரண்டு வரிகள் எழுதுவார். உடனே ஏதாவது இலக்கிய பேச்சு தொடங்கும். அதிலேயே மூழ்கிவிடுவார்.சுவையோடு பேசிக் கொண்டிருப்பார். பாடல்களைப் பற்றி யாராவது நினைவுபடுத்துவார்கள். “அது கெடக்குதுப்பா; எழுதினால் போச்சு. சினிமாப் பாட்டுத் தானே?"ன்று சொல்லிவிட்டு மீண்டும் பேச்சைத் தொடங்குவார்.

ஈரோட்டிலும் ஏற்காடு மலைப்பகுதியிலும் பாலாமணிக்குச் சில வெளிப்புறக் காட்சிகள் படமெடுக்கப்பட்டன.

டைரக்டர் பி. வி. ராவ்

பாலாமணியை டைரக்ட் செய்ய பி. வி. ராவ் வந்து சேர்ந்தார். அவர் ஒத்திகை பார்க்கும் முறையும், படம் எடுக்கும் விதமும் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தன. யார் எதைச் சொன் ஞலும் கேட்கமாட்டார். தாமே சர்வாதிகாரியாக இருந்து செய லாற்றினார். எங்களோடு நடிக்க வந்திருந்த பெண்கள் அவரிடம் அகப்பட்டுக் கொண்டு விழித்தது மிகவும் பரிதாபமாக இருந்தது. அடிக்கடி எங்களுக்குள் தகராறு நடந்து கொண்டே இருந்தது. எங்களுக்கு வந்த ஆத்திரத்தையெல்லாம் ஒருவாறு அடக்கிக் கொண்டு, 1937இல் குமாஸ்தாவின் பெண் நாடகத்தைத் தயாரித்தபோது டைரக்டர் வி.பி.வார் என்று ஒரு பாத்திரத்தைப் படைத்தோம், ராவ் செய்த அட்டூழியங்களே அந்த வார் என்னும் பாத்திரத்தின் மூலம் மக்களுக்கு விளக்கிக் காட்டி எங்கள் வயிற். றெரிச்சலைத் தீர்த்துக் கொண்டோம். சபையோர் அந்தக் காட்சியைப் பிரமாதமாக ரசித்தார்கள்.

டைரக்டர் பி.வி.ராவ் சாதாரணமாக எப்போதுமே நிதா னத்தில் இருப்பதில்லை. அரை மயக்கத்திலேயேதான் காரியங் களைச் செய்வது வழக்கம். அதே நிலையில் படத்தையும் டைரக்ட் செய்தார். நாங்கள் பம்பாயில் இருந்த அதே சமயத்தில் புளுவில் சந்திரகாந்தா, வசந்தசேனா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் எல்லோரும் புனா சென்று ராஜாவைப் பார்த்து வந்தோம். டைரக்டர் ராவும் எங்களோடு ராஜாவைப் பார்க்க வந்திருந்தார். எல்லோரும் மகிழ்ச்சியோடு அளவளாவிக் கொண் டிருக்கும் நேரத்தில் டைரக்டர் ராஜா,

“டே பசங்களா, ராவ் ஒன்னும் தெரியாதவன்; அப்பாவி. நீங்கதான் கூட இருந்து படத்தை உருப்படியாச் செய்யனும்” என்று எங்களிடம் கூறினார். டைரக்டர் ராவிடம், 

“டே ராவ், பையன்களெல்லாம் நல்ல புத்திசாலிங்க. நீ சர்வாதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடாதே. அவங்களோட ஒத்துழைச்சு படத்தை ஒழுங்கா எடுக்க முயற்சி பண்ணு” என்று கூறினார். ராஜாவின் வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போல் இருந்தன.

பெருக் தோல்வி

பம்பாயில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்டையபுரம் அரண்மனைக் கொட்டகையில் கம்பெனிக்குப் புதிய காட்சிகள் தயாராகி வந்தன. பம்பாயில் எங்களுக்கு நிம்மதியே இல்லை. கம்பெனியின் வளர்ச்சிபற்றிக் கனவுகள் கண்டோம். மனத்திலேயே புதிய புதிய கோட்டைகளைக் கட்டினோம்.

அந்தேரி ராம்னிக்லால் மோகன்லால் ஸ்டுடியோவில் இரண்டு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. எப்படியோ படத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு திரும்பினோம். படத்தின் எடிட்டிங்'கின் போது சின்னண்ணா உடனிருப்பது நல்லதென எல்லோரும் எண்ணினோம். டைரக்டர் ராவ், பிடிவாதமாக மறுத்து விட்டார்.

நாங்கள் திரும்பிய இரண்டு மாதத்திற்குப் பிறகு பாலாமணி படம் மதுரையில் திரையிடப்பட்டது. நாங்கள் நால்வரும் போய்ப் பார்த்தோம். எங்களுக்கே மூளை குழம்பியது. எடுத்ததே மோசம். அதிலும் காட்சிகளை முன்னும் பின்னுமாக வெட்டி ஒட்டி ஒரே குளறுபடி செய்திருந்தார். பி. வி. ராவ். படத்தை முழுதும் பார்க்க மனமின்றிப் பாதியிலேயே எழுந்து வந்து விட்டோம். முதல் படம் மேனகா சிறந்த படமெனப் பரிசு பெற்றது. இரண்டாவது படம் பாலாமணி படுதோல்வி அடைந்தது.