பக்கம்:இராவண காவியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இராவண காவியம்


7.ஆயிரங் கல்லி னகன்ற பரப்ப

தாயய னாட ரவாவுற, நீங்கிப்

போயல ரேங்கப் பொலிவுறு செல்வம்

தாயது பண்டக சாலையை மானும்.


8.ஆயநன் னாட்டி னணியுறுப் பாக

ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச்

சேயுயர் வானின் றிகழ்மணித் தூணின்

மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.


9.அம்மலை தோன்றி யதன்பெயர் பெற்றுக்

கைம்மலை கண்டு களித்தெதிர் செல்லும்

மைம்மலை போல வளனுறப் பாய்ந்தே

அம்மலை நாட்டையவ் வாறணி செய்யும்.


10.நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென்

கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு

நோட்ட மிகுமிரு நூறுகற் றெற்கில்

ஊட்டுங் குமரியா றோடின காணும்.


11.அம்மலைத் தெற்கி னணிமுகில் மேயும்

செம்மலை வீழ்க்குந் திரடொடர் மேய

பன்மலை யோடு பழந்தமிழ் நாட்டு

மன்மலை யாத மணிமலை யோங்கும்.


12.அத்தொடர்க் குன்றத் தருமக வாகி

முத்தமி ழாளர் முதுநெறி போலப்

பத்தி யறாதுசெல் பஃறுளி யாறு

புத்துண வாக்கிப் புதுவிருந் தாற்றும்.




9. கைமலை-யானை . அ மலைநாடு-குமரி காடு. இது,

பெருவளத்தின் மறுபெயர்.

10. நோட்டம்-பார்வை, ஊட்டுதல்-வளஞ்செய் தல்.

11. செம்மல்-(பகைவரின் }செருக்கு, திரள் தொடர்.

மலைதல்-மயங்குதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/36&oldid=1198230" இலிருந்து மீள்விக்கப்பட்டது