பக்கம்:இராவண காவியம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகப் படலம் 937 32. எய்திய முனிவனைத் தொழுதென் எந்தையே! செய்தியுண் டோவெனச் சிரித்துக் கோசிகன் பெய்திடு மம்பினைப் பிறையைப் போற்றினால் உய்தியு முண்டதி லுனக்கெ னாமுனம். 33. சொல்லிய புதரினைத் துணிந்து கொண்டான் 'வில்லினை வளைப்பது வெண் ம திப்பிறை; புல்லிய வம்பது பொழியும் வெண்கதிர்' அல்லவோ? எனமுனி' ஆமாம் மைந்தகேள். 34. அங்கொரு பெண்ணை நீ அழித்தற் கீடதா இங்கொரு பெண்ணை நீ எய்தப் பெற்றனை; மங்குலை யணிமதில் மிதிலை மாநகர் மங்கல நாளினில் வந்து புக்கனம், 35. தாதுகு தாமரைப் பூவின் தண்ணிதம் மீதனங் கண்படு மிதில நாட் டினைப் பாதுகாத் துலகியல் பயிலு மன்னற்குச் சீதையென் றொரு பெயர்ச் செல்வி யுள்ளனர். 38. கலைமதி யெனவொளி காலும் பாவைதன் விலையென வொருபெரு வில்லை வைத்துளான்; சிலையினை வளைத்திடும் செயல் தோளெனும் மலையினை யன்ன வள் மணந்து கொள் வளாம். இதுவரை யெண்ணிலா மன் ன செய்தியம் மதிமுகி வில்லினை வளைக்க மாட்டி லார் எதிரிடம் போயினார் என்ன ராமனும் இதுமலை யொவென எழுந்து நின்றனன். 38. திருத்தகு மொருத்திவஞ் சினம தாகிடில் துருப்பிடித் திருக்குமச் சொத்தை வில்லினை முரித்துமே யெறிகுவன் மன்னன் முன் னென, நரித்தொழில் முனிவனும் நம்பி நன்றெனா. 32, அம்பு பெய்திடும் பிறையைப் போற்றினால்-வில்லை (பிறைபோல்) வகள த்தால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/253&oldid=987770" இலிருந்து மீள்விக்கப்பட்டது