பக்கம்:காவியப்பரிசு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னி மகளே? மகாகவி தாகூரின் கவிதைக் -கருத்தை அடிச் சரடாகக் கொண்டு இயற்றப்பட்ட கவிதை இது. ' தங்க வளைமலர்ந்த செங்கரக் கொடி அசைந் '

தாடித் துவலி ஒளி கூடியிலகும்.

திங்க விளமுகத்தில் மூடு வரும்ப-- சுடர்ச் சோதி தெறிக்கும் கண்கள் பாதி மலர, துங்க வளமை மிஞ்சும் அங்க அசைவில்-விண்ணில் துன்ளித் திமிர்ந்தொசியும் மின்னல் ஒளிர, மங்கைப் பருவமெங்கும் பொங்கி வழிய-வரும் வாலைக் குமரியே! நீ சொல்லுவதைக் கேள்! சில்லுக் குரலையுன்றன் சிந்து நகைய்ை-எம் சிந்தை கவருமுன்றன் சந்த மொழியைச் சொல்லைக் குழைத்துணர்வை விள்ளும். இசையால்-மனம் சொக்கும் கவிதையினில் உன்னை இசைத்தோம்! வல்லிக் கொடியிடையை, பிஞ்சு விரலை-உயிர் வாஞ்சை கொளத் துடிக்கும் அங்க ஒயிலைக் கல்லைப் பிசைந்துகலை புள்ள விரிவால்- உளம் - கவ்வும் சிலையினிலே உன்னை வடித்தோம்! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/114&oldid=989607" இலிருந்து மீள்விக்கப்பட்டது