அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/திரு.வி.க. பாராட்டிய தியாகவல்லி

விக்கிமூலம் இலிருந்து

அன்னி பெசண்ட் அம்மையாரின்
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கன்


1. திரு. வி. க. பாராட்டிய தியாகவல்லி


"1914-ம் ஆண்டு முதல் 1918-ம் ஆண்டு வரை ஐரோப்பாவில் பெரும் போர் நடந்தது.


அதே காலத்தில் இந்தியாவிலும் அரசியல் உரிமைப் போர் மூண்டது. இப்போரை மூட்டியவர் யார்? ஆன்னி பெசண்ட் ஆம்மையqர்.


திலகர் பெருமான் உள்ளிட்ட தேசபக்தர் பலர் சிறைக் கோட்டம் சென்ற பின்னர் (1998) காங்கிரஸ் மிதவாதத்தில் அழுந்தியது.


அதன் உறக்கத்தைப் போக்கி அதை எழச்செய்தல் வேண்டும் என்ற வேட்கை அன்னி பெசனண்ட் அம்மையாரிடை உதித்தது அவ்வேட்கை பெருஞ் சுய ஆட்சிக் கிளர்ச்சியாகப் பருத்தது.


அதன் ஆடியில் இரண்டு கொள்கைகள் சிறப்பாக நிலவின. ஒன்று பிரிட்டிஷ் தொடர்புடன் சுயஆட்சிபெறல் வேண்டுமென்பது; மற்றொன்று கிளர்ச்சி நியாய வரம்புக்கு உட்பட்டதாயிருத்தல் வேண்டுமென்பது.


இவ்விரண்டு கொள்கையை அடிப்படையாகக்கொண்ட இயக்கத்தையும் சென்னை அரசாங்கம் ஐயுற்றது; இயக்கத் தலைவரை 1917-ம் ஆண்டில் காவலில் வைத்தது.

அவர் காவலில் வைக்கப்பட்ட நாள் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்பட்டது.


ஆயிரக்கணக்கில் கூட்டங்கள் கூடும்; கூட்டங்கள் அமைதியாக-மிக அமைதியாக நடைபெறும். ஒரு மூலையிலாவது சிறு குழப்பமோ, துளி இரத்தஞ் சிந்தலோ நிகழ வில்லை.


சென்னையில் பல வட்டங்களில் விழாக்கள் நடைபெறும். சிலவற்றில் சிறியேன் சேவையும் சேரும்.


பெசண்ட் அம்மையாரின் பேச்சும், எழுத்தும் மூன்று மாதக் காவலும் இந்தியாவை ஒருமைப்படுத்தின; இங்கிலாந்தில் பார்லிமெண்டில் 'இந்தியாவுக்கு ஜனப் பொறுப்பாட்சி நல்கப்படும்' என்ற அறிக்கையை 1917-ஆகஸ்டில் பிறப்பிக்கச் செய்தன.


சிறையினின்றும் வெளிவந்த திலகர் பெருமான் துணை அம்மையார் இயக்கத்துக்குக் கிடைத்தது. காந்தியடிகளும் பிணங்கி நின்றாரில்லை. ஜின்னாவின் இணக்கம் இயக்கத்துக்குப் பேராக்கம் தந்தது.


1947-ம் ஆண்டின் இறுதியில் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸுக்குத் தலைவராக நாடு பெசண்ட் அம்மையாரைத் தெரிந்தெடுத்தது.

(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், முதல்பகுதி)


-என்று, தமிழ்ப் பெருமக்களால் தமிழ்த் தென்றல் திரு.வி.க என்று உளமார அழைத்துப் போற்றப்பட்ட திரு.வி. கலியான சுந்தரம் அவர்கள் அன்னி பெசண்ட் அம்மையார் தொண்டுகளைப் பாராட்டி, தனது வாழ்க்கைக் குறிப்புகள் என்ற புத்தகத்திலே எழுதியுள்ளார்!


எழுதியவர் எத்தகையவர் என்பது ஓரளவாவது தெரிந்தால், எழுதப்பட்டவர் எப்பேர்பட்டவராக இருந்திருப்பார் என்ற அருமை, பெருமைகளை நம்மால் உணர முடியும் இல்லையா?


திரு.வி.க. அவர்கள் தமிழில் தன்னிகரற்ற மேதைகளிலே ஒருவர்; அவர் எழுத்துக்கள், பீடும்-மிடுக்கும், எழுச்சியும்-கிளர்ச்சியும், வீறும் வீரமும் மதர்ந்து ஏக்கழுத்தம் பெற்றதாக விளங்கும்!


அவர் தமிழ் நடையிலே காவியச்சுவை கற்கண்டு பிறப்பெடுக்கும்; வீரச்சுவை காரத்தைவிட கடுமையாகத் தாண்டவமாடும்; நகைச்சுவை கரும்புச் சாறென பொழியும்; சாதுச்சுவை கருணையாக நடமாடும்; சமயச்சுவை உள்ளத்தை உருக்கும்; அரசியல் சுவை தென்றலென கவரி வீசும்; இதற்கு மேலும் பற்பலச் சுவைகள் அவர் சொற்பொழிவிலே மின்னலென பளிச்சிட்டு ஒளிகாட்டும்!


இத்தகைய சுவைகள் ஒருங்கே திரண்டு உருவமெடுத்த பல்கலை வித்தகர் தான் திரு.வி.க என்று அழைக்கப்பட்ட கருனைப் பொதிகைமலையாகக்காட்சி தந்தவர் திரு.வி.க


தொழிலாளர் சங்கத்தை முதன்முதலில் உருவாக்கிய தொழிலாளர் தலைவராக விளங்கியவர்: வெள்ளையர் அரசு அவரை நாடு கடத்த ஆணையிடும்போது அப்போதைய முதலமைச்சர் பனகல் அரசரும், தியாகராச செட்டியாரும் ஜஸ்டிஸ் ஆட்சியைக் கலைக்கப் பதவிகளைத் துறப்போம் என்று ஒரு காங்கிரஸ் தலைவருக்காக முன்வரக் கூடிய அளவிற்கு திரு.வி.க பண்பின் பெட்டிகமாகச் சிறந்தார்.


அத்தகைய ஒர் அன்பாளர், பண்பாளர், அரசியல் வித்தனர், தொழிற்சங்கப் போராட்டத் தந்தை காங்கிரஸ் மேதைகளுள் மேதை, கனிந்த சொற்பொழிவாளர்; இனிய எழுத்தாளர்; வீரத்தில் அரிமாவாக விளங்கியவர், பத்திரிகைப் பேராசிரியர், இவை போன்ற அரிய செயல்கனை ஆற்றிய திறனாளரான திரு வி.க, அவர்களால் பாராட்டப் பட்டவர் அன்னி பெசண்ட் என்றால் அந்த அம்மையார் எத்தகையவராக இருப்பார்; என்னிப்பார்க்க வேண்டும்:


அன்னிபெசண்ட் இங்கிலாந்து நாட்டிலே தோன்றியவர் இடுக்கண் வாழ்வுச் சம்பவங்களே அவரது இளமை வாழ்வு; பல்கலை வித்தகராக விளங்கிய வீரத்தாய்க்குலம்:


தமிழகம் வந்தார்: வீரம் பிறந்த மண்ணிலே கால் வைத்தப் பண்புக்கு ஏற்றவாறு-ஒவ்வொரு துறையிலும் வீராங்கனை என்ற முத்திரையைப் பொறித்தார்.


தியோ சாபிகல் சங்கத்திற்குரிய தலைவியானார்: "நியூ இந்தியா" என்ற பத்திரிகைக்கு ஆசிரியரானார்: ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரத்துக்காக ஆட்சிக் இளர்ச்சியிலே ஈடுபட்டார்:


சூறாவளிப் பிரச்சாரம் இந்தியா முழுவதும் மேற்கொண்டு சுற்றினார்! போராட்டம் செய்தார்: கைதானார்! மூன்று மாதம் சிறைக்காவல் பெற்றார்:


இங்கிலாந்திலே பிறந்த பெண் ஒருத்தி இந்தியாவிலே உள்ள தமிழகம் வந்து, சுய ஆட்சிப் போராட்டத்தில் கைதாகி, சிறைவாழ்வுப் பெற்ற ஒரு வீராங்கனையின் அஞ்சா நெஞ்ச அரசியல் வித்தகத்தைப் பாராட்டித்தான் திரு.வி.க தனது வாழ்க்கைக் குறிப்புகளிலே எழுதினாரே தவிர, நேற்று பெய்த மழையிலே முளைத்த அரசியல் காளான்களை அல்ல என்பதற்காகவே இந்த சுருக்கக் குறிப்புக்களைக் கொடுத்தோம்.


அப்படியானால், அன்னி பெசண்ட் அம்மையார் யார்? அவர் வரலாறு என்ன? வாழ்க்கை என்ன? சோதனைகள் என்னென்ன? சாதனைகள் என்னென்ன என்பதை சற்று விவரமாகவே பார்ப்போம்!


இந்திய மக்களின் இதய வானத்திலே இரண்டு வெளி நாட்டு விண்மீன்கள் அன்றும், இன்றும், என்றும் சுடர் விட்டு ஒளியுமிழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று அன்னிபெசண்ட் அம்மையார், மற்றொன்று அன்னை தெரசாவாகும்!


இரண்டு பேருமே எதிர்ப்புகளைக் கண்டு ஏறுபோல் போராடி முறியடித்த வீராங்கணைகளாவர் ஒருவர் அரசியல், சமுதாயவியல் ஆன்மீகவியல், வாழ்வியல் மதவியல்; பெண்ணியல் போன்றவற்றிலே பீடுநடை போட்ட அன்னிபெசண்ட் அம்மையார்!


மற்றவர், அரசியலைப் பற்றிய சிந்தனையே தேவையற்றது; மக்கள் வளவாழ்வே நலவாழ்வு என்று நம்பி; சமுதாயத் தொண்டே உலகம் போற்றக்கூடியது என்பதுணர்ந்து, மக்கள் நலத் தொண்டர்ற்றிய சமூக சேவைத் துறையின் முடிசூடா ராணியான அன்னை தெரசா என்பவர் ஆவார்.


இங்கே நாம் அன்னிபெசண்ட் அம்மையின் வரலாற்றுச் சம்பவங்களைப் பார்க்கிறோம்! அவ்வளவுதான்!


இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் இலண்டன் அந்த நாட்டில் "உட்" என்ற் பாரம்பரியக் குடும்பப் பெயரோடு வாழ்ந்தவர் வில்லியம் உட்; இவர்தான் அன்னியின் தந்தை இவர் டப்ளினில் உள்ள டிரினிடி கல்லூரியில் படித்தவர் டப்ளின் பல்கலைக் கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்று டாக்டர் பணி புரிந்தவர்:


கூர் ஆறிவாளர் வில்லியம்; மெத்தப் படித்தக் கல்வியாளர்; தத்துவம் படித்தவர்; கணிதத்தில் வல்லவர் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம மொழிகளில் புலவர் எந்த கரியத்தில் ஈடுபட்டாலும் கிரேக்கர்களைப்போல, ஏன்? எப்படி? எதற்காக என்ற வினாக்களை விடுத்தே செயலாற்றலில் இபடுவார்;

அன்னி பெசண்ட் அம்மாவின் பெயர் எமிலி லோரிஸ்; "மோரீஸ்", என்ற குடும்பப்பாரம்பரியப் பெயரைப் பெற்றவர்; அவர் கணவருக்கு உள்ள "உட்”, என்ற பெயரைப் போல; ஆழமான மதப்பற்றிலும் கடவுட் பகுதியிலும் சிறப்புடையப் பற்றாளர்:


வில்லியம் உட், எமிலி மோரிஸ் என்ற தம்பதிகள் ரொட்டியும்-ஜாமும் போல ஒற்றுமைச் சுவையோடு வாழ்ந்து இரு ஆண்களையும், ஒரு பெண்ணையும் பெற்று வளர்த்தார்கள். இவர்களுள் அந்த பெண் குழந்தைதான் அன்னி!


மூத்த ஆண் குழந்தைக்கு ஹாரி என்று பெயர்: இணைய ஆண் குழந்தைக்கு ஆல்பிரட் என்று பெயர்: அன்னி இரு ஆண்ளுக்கும் இடையே 1847-ம் ஆண்டு பிறந்தவர்:


ஒரே பெண் குழந்தை அன்னி! வளர்ப்பிலே வளம் தானே ஓங்கும் அதனால் அப்பாவும் அம்மாவும் அன்னி மீது அளவிடற்கரிய அன்புடன் வளர்த்தார்கள்:


அழகே உருவான அன்னி ரோஜாப்பூ வண்ணம்! எவரிடமும் அன்புடன் பழகும் எழிலான சுபாவம் கறுசுதுப்பும் துடிதுடிப்பும் மிக்க.சிறுமீ; பொதுவாக அவரது நடையின் அழகைக் கண்டு அன்னியை வான்கோமி" என்றே அழைத்து மகிழ்வர் பெற்றோர்:


அன்னியின் தந்தை ஒரு டாக்டர் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதற்கேற்ப எலும்புருக்கி நோயால் இறந்து போன ஒருவரின் உடலை அறுத்துச் சோதனை செய்யும் டாக்டர்களுக்கு உதவி செய்திட அவர்களுடன் சேர்ந்து வில்லியமும் ஈடுபட்டார்.


செத்த எலும்புருக்கி நோயாளியின் எலும்பு ஒன்று வில்லியம் விரலில் ஒன்றை வெட்டிவிட்டது. உடனே தொற்றக் கூடிய நோயல்லவா அந்த நோய்?

அதற்கு உடனே மருந்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும், வில்லியம் அந்த சிகிச்சை அலட்சியம் செய்ததால், கிருமிகள் அவர் உடலிலே குடியேறி பெருகி, மரணம் என்ற அளவுக்கு வந்துவிட்டது.


ஆறுவாரம் கூட வில்லியம் உயிரோடு இருக்கவில்லை! பாவம் எலும்புருக்கி எமன் வில்லியம் உயிரைப் பறித்து விட்டது. அருமை மகளையும் அன்பு மனைவியையும், மற்ற இரு சிறுவர்களையும் தவிக்கவிட்டுவிட்டு அவர் இயேசு திருவடி சேர்ந்து விட்டார்.


கணவனைப் பறிகொடுத்த எமிலி கதறினார்; அழுதார் புரண்டார்; ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ ஒளவை கேட்டது கேள்வியாக நின்று விட்டது பாவம் மயங்கி வீழ்ந்தாள் எமிலி' சிகிச்சை கொடுக்கப்பட்ட்து அவருக்கு:


அன்னி சிறு வயது பெண் தனது வீட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; தந்தையின் மரணம் என்ன என்றே புரியாமல் தாய் முகத்தையே பார்த்துப் பார்த்து விம்மினார்:


தாயிக்கு ஆறுதலாக இருந்த இளையவன் ஆல்பிரட் நோயாகப் படுத்தான்! பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப எமிலி கொடுத்த சிகிச்சை பால் ஆல்பிரட் உயிர் பெற்று எழவில்லை! ஒருநாள் அவனும் தந்தை சுவடுகள் மீதே கால்வைத்து இறந்து போனான்-பாவம்!


சவப்பெட்டியிலே வைக்கப்பட்டிருந்த தம்பிக்கு அன்னி முத்தமிட்டாள்: எமிலி கண்ணிர் விட்டுக் கதறினாள்! சுற்றத்தாரும் ஐயோ பாவமே, என்று பதறினார்கள் வில்லியம் வீடு பார்ப்பதற்கே சோகமாகக் கிடந்தது! ஒரு தலைவன் இல்லாத வீடு எப்படியானது பார்த்தீர்கனா