138
தமிழ்ப் பழமொழிகள்
வாழ்கிறதும் கெடுகிறதும் வாயாலேதான்.
வாழ்கிறதும் தாழ்கிறதும் வண்டி உருளை போல.
வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்தாள்.
வாழ்கிறபோது இல்லாத வாழைப்பூச் சேலை தாலி அறுத்துத் தறி போட்டு வந்ததாம். 20040
வாழ்கிறவளுக்குச் சக்களத்தி வந்து முளைத்தான்.
வாழ்கிறவளை வைய வேண்டாம்; தாழ்கிறவளைத் திட்ட வேண்டாம்.
வாழ்கிறவன் வாழ்கிறான் என்று மதுரை எல்லாம் பேராம்.
வாழ்கிறவனுக்கு வைரம்.
வாழ்கிறவனை வாழ்த்த வேண்டாம்; தாழ்கிறவனைத் திட்ட வேண்டாம். 20045
வாழ்கிற வீட்டில் மரநாயைக் கட்டினதுபோல.
வாழ்கிற வீட்டில் வனக்குரங்கை வைத்தது போல.
வாழ்கிற வீட்டுக்கு ஒரு பெண்ணும் வைக்கோல் போருக்கு ஒரு கன்றும் இருந்தால் போதும்.
வாழ்கிற வீட்டுக்கு வாழையை வைத்துப் பார்.
வாழ்கிறான் வாழ்கிறான் என்று மதுரை எல்லாம் பேராம்; ஆற்றில் இறங்கினால் ஐம்பத்தெட்டுத் தொல்லையாம். 20050
வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு எடு; கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு எடு.
வாழ்ந்தவர் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகாது; கெட்டவர் வாழ்ந்தால் கிளைப்புறு தாமரை.
வாழ்ந்தவன் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.
வாழ்ந்தவன் கெட்டு வறியவனானால் தாழ்ந்தவனும் ஏசுவான்.
வாழ்ந்தவன் தாழ்ந்தால் வறையோட்டுக்கும் ஆகான். 20055
வாழ்ந்தவனை வாழ்த்த வேண்டாம்; தாழ்ந்தவனைத் திட்ட வேண்டாம்.
வாழ்ந்தாளாம சுடபி, வறுத்தாளாம் ஓடு வைத்து: ஓடு உடைந்தது என்று உட்கார்ந்தாளாம சேஷி.