இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்ப் பழமொழிகள்
161
வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்
வீமனுக்கு வேலை கொடுத்தது போல.
வீர சூரன் ஆனாலும் முன்படை வேண்டும்.
வீரம் இல்லாத பேடியைப் போருக்கு அழைத்ததுபோல
வீரம் எல்லாம் வெளிச்சம் ஆயிற்று. 20615
வீரம் கெட்டவன் சேரன் ஆவானா?
வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டுக்களம் கண்டு முதுகு இடலாமா?
வீராணத்து ஏரி விழுந்து விழுந்து விளைந்தாலும் பெருமாக் கூர் ரண்டுக்குப் பொரிமாவுக்குக் காணாது.
வீரியத்தை விடக் காரியம் பெரிது.
வீரியம் இல்லையேல் காரியம் இல்லை. 20620
வீரியம் பெரிதோ, காரியம் பெரிதோ?
(பிரதானமா?)