தமிழ்ப் பழமொழிகள்
111
ஆளை அறிந்து தாண்டுகிறதா?
ஆளை அறிந்துதான் அறுக்கிறான். 2555
ஆளை ஆள் அறிய வேண்டும்; மீனைப் புளியங்காய் அறிய வேண்டும்.
ஆளை ஆள் குத்தும்; ஆள் மிடுக்குப் பத்துப் பேரைக் குத்தும்.
ஆளை ஏய்க்குமாம் நரி: அதனை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு.
ஆளைக் கண்ட சமுத்திரம்.
ஆளைக் கண்டால் ஆறு மணி; ஆளைக் காணா விட்டால் மூன்று மணி. 2560
ஆளைக் கண்டு ஏமாற்றுமாம் ஆலங்காட்டுப் பேய்.
- (ஏய்க்குமாம் பிசாசு.)
ஆளைக் கண்டு மலைக்காதே; ஊது காமாலை.
ஆளைச் சுற்றிப் பாராமல் அளக்கிறதா?
ஆளைச் சுற்றிப் பாராமல் அழுகிறாள் ஒரு காலே.
ஆளைச் சேர்த்தாயோ? அடிமையைச் சேர்த்தாயோ? 2565
ஆளை நீட்டிப் போடு.
ஆளைப் பார் சோளக்காட்டிலே.
- (சோளக் கொல்லையிலே.)
ஆளைப் பார், சோளக் கொல்லைப் பொம்மை மாதிரி.
ஆளைப் பார்த்தால் அழகுதான்; ஏரில் கட்டினால் குழவுதான்.
ஆளைப் பார்த்தால் அழகுபோல; வேலையைப் பார்த்தால் குழவு போல. 2570
ஆளைப் பார்த்தால் அழகு மலை; வேலையைப் பார்த்தால் குழவு மலை.
ஆளைப் பார்த்தான்; தலையில் அடித்தான்.
ஆளைப் பார்த்தான் வாயால் ஏய்த்தான்.
- (பார்த்துத்தான்.)
ஆளைப் பார்த்து ஆசனம் போடுவான்.
ஆளைப் பார்த்துக் கூலி கேட்கிறது; அவனைப் பார்த்துப் பெண்டு கேட்கிறது. 2575
ஆளைப் பார்த்து மலைக்காதே; ஊது கணை.