திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
117
எடுத்துக் காட்டாக ஒருசில கண்டு மகிழ்க
‘பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே
- புறம் 107:3-4
‘மாரிஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்’
- பழமொழி: 17:13
‘மாரி யன்ன வண்மைத்
தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!'
- புறம்:133:6-7
- கைம்மாறு - செய்ந்நன்றிக்கு நன்றி செய்தல் - எதிர் நன்றி.
- பிறர்பால் நன்றி எதிர்பாராத பொதுவறம் கருதுதல் வேண்டும் என்றார்.
'கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தி
தம்மால் இயலுதவி தாம்செய்வர் - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் சென்று’
- நன்னெறி : 27
கொல், ஓ - அசைகள்
4) இஃது ஒப்புரவறிதல் உணர்வுக்கு விளக்கமாக அமைதலின் அதிகாரத்து முன்வைத்துக் கூறினார் என்க.
உகஉ. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு
- 212
பொருள்கோள் முறை: இயல்பு
பொழிப்புரை : பொதுமை நலம் கருதும் ஒர் அறவாணனுக்கு அவன் செய்கின்ற தாழாத முயற்சி ஈட்டித் தந்த பொருள்யாவும், அவன் தகுந்தவர்களுக்கு அவற்றைக் கொடுத்து உதவுதல் பொருட்டேயாம் என்க.
சில விளக்கக் குறிப்புகள்:
1) தாள்ஆற்றித் தந்த பொருள் எல்லாம்: பொதுமை நலம் கருதும் ஒர் அறவாணனுக்கு அவன் செய்கின்ற தாழாத முயற்சி ஈட்டித்தந்த பொருள்யாவும்,
- 'பொதுமை நலம் கருதும் ஓர் அறவாணனுக்கு' என்னும் எழுவாய்,