இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
396
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பணம் அவசியமானதேயாம்!
பணம் படுத்தும் பாடு! ஐயோ, கொடுமை !
பணம் விரும்பாத மனிதனே இல்லை!
நாளும் நயா பைசாவுக்குக் கூட
உருப்படியாக உழைக்காதவர்கள் கூடப்
பணம் கேட்கின்றனர்.
பணம் மனிதனை மிருகமாக்குகிறது!
பணம் போலியை உண்மையென்று விலையாக்குகிறது!
பணம் உறவைக் கெடுக்கிறது!
பணம் நட்பைச் சீர் குலைக்கிறது!
பணம் நம்பிக்கை நல்லெண்ணத்தை நாசமாக்குகிறது!
பணம் உலுத்தரை உயர்த்துகிறது!
பணம் உயர்ந்தோரைத் தாழ்த்துகிறது!
ஐயகோ மாந்தரைப் பிணமாக்கும்
உனக்குப் பணம் என்று பெயர் வைத்தது யார்?