இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழக ஆலயங்களில் தமிழிலும் வழிபாடு (அருச்சனை) செய்ய வசதி வேண்டும் என்று அருள் நெறியாளர்களாகிய நாம் பலகாலம் சொல்லி வந்துள்ளோம். தக்க சான்றுகளுடன் நம்முடைய கொள்கையைத் தெளிவாக இந்த வெளியீடு விளக்கும் என்று நம்புகிறோம்.
தமிழ் அருச்சனை இயக்கத்திற்கு ஆதரவு நம் மனத்தளவில் மட்டும் இருந்து பயனில்லை. நம் எண்ணத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதின் மூலமே நாம் வெற்றி காணும் காலத்தை விரைவில் நெருங்க இயலும்.
தமிழகத்து நற்குடி மக்கள் நாளும் நற்றமிழ் அருச்சனை செய்து திருவருள் நலம்பெற கேட்டுக் கொள்கிறோம்.