612
விந்தன் கதைகள்
"ஏனாம்?"
"பாட்டி வரட்டும்!"
"அவள் எங்கே வரப் போகிறாள், இப்போது?"
"ஏன், வர மாட்டாளா?"
"ஊஹும், அவள் கதை கேட்கப் போயிருக்கிறாள், கதை!"
"கதையா, பாட்டியா! - ஆச்சரியம் தாங்கவில்லை, பையனுக்கு - தனக்குக் கதைமேல் கதையாகச் சொல்லும் பாட்டி, கதை கேட்கப் போயிருக்கிறாள் என்றால்? அவ்வளவு எளிதில் நம்ப முடியவில்லை, அவனால் - "நிஜமாகவா?" என்று மறுபடியும் கேட்டான்.
"ஆமாண்டா, ஆமாம். தெருவில் யாரோ ஒரு பௌராணிகர் ராமாயணம் சொல்கிறாரே, உனக்குத் தெரியாதா? அதற்குத் தான் போயிருக்கிறாள் அவள்!"
"நானும் அங்கே போகட்டுமா, அம்மா?"
"போனால் அவ்வளவுதான்; காலை ஒடித்துவிடுவார், உன் அப்பா!"
"நீ காதைத் திருகி எடுத்துக் கொண்டு விடுவாய்; அப்பா காலை ஒடித்துக் கொண்டு விடுவார்! இப்படியே ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு போனால் கடைசியில் நான் என்னதான் ஆவதாம்?"
அம்மா சிரித்தாள்; பையனோ அழுதான், பாட்டியிடம் போக முடியவில்லை என்று!
இந்தச் சமயத்தில் ஒரு கையிலே 'ரோஜாப்பூ மாலை' கனக்க, இன்னொரு கையிலே 'சிறுகதை மன்னர், செல்வராஜா!' என்று ஆரம்பமாகும் 'வாழ்த்து மடல்' பொன்னொழுத்திலே ஜொலிக்க, 'இரவல் காரி'லிருந்து இறங்கிய அவன் அப்பா 'ஏண்டா அழுகிறாய்?' என்று கேட்டார் தம்முடைய மகனை அன்போடு அணைத்தபடி.
அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், "அவனுக்கு என்ன வேலை? பாட்டி இல்லையாம் கதை சொல்ல; நீங்க வாங்க, சாப்பிட" என்றாள் அவனுடைய அம்மா குறுக்கிட்டு.
"அவ்வளவுதானே? இதோ நானே சாப்பிட்டு விட்டு வந்துவிடுகிறேன் - உனக்குக் கதை சொல்ல!" என்றார் அப்பா.
அவ்வளவுதான்; பையனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. இத்தனை நாளும் ஏதும் அறியாத பாட்டியிடம் கதை கேட்டுக்-