இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நானும் நீயும் உரையாடுகிறோம்;
“நெடுங்கடலில் மூழ்கி
நித்திலங்களை எடுத்துத் தொடுத்து
உனக்கு மாலை சூட்ட விரும்புகிறேன்:
நீ ஏற்றுக் கொள்வாயல்லவா?”
“
நீங்கள் பெரிய தீரர்தான்;
ஆனால் அந்த முத்துமாலை எனக்குவேண்டாம்”
“வானத்தில் ஏறி
விண்மீன்களைக் கொய்துகட்டி
உனக்கு மாலை அணிவிப்பேன்;
அதையாவது ஏற்றுக் கொள்வாயல்லவா?”
“நீங்கள் பெரிய கவிஞர்தான்;
ஆனால் அந்த நட்சத்திரமாலை
எனக்கு வேண்டாம்.”
“ஓ... சாதாரண மலர் மாலையைத்தான் நீயும் விரும்புகிறாயா?”
“இல்லை. அதுவும் வேண்டாம்.”
“இப்படி எதுவும் வேண்டாமென்று மறுத்தால்
உன் கண்கள் என் கண்ணிரையல்லவா -
சந்திக்கக் கூடும்”
“எனக்கு அந்தக்
கண்ணிர் மாலைதான் வேண்டும்”
67
96