இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை
தமிழ்மாமுனிவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்
தமிழில்-உரைநடையில், பிரார்த்தனை, நூலில்லைப் பிரார்த்தனை என்பது உள்ளத்திலிருந்து எழுவது. வாழ்க் கைன்யப் பிரதிபலிப்பது.
நாள்தோறும், நாட்காலையில், திருவருளைச் சிந்தித்த வண்ணம், அப்படியே எழுத்துருப் பெற்றுள்ள நூலே திருவருட் சிந்தனை. -
“ *. நமது அன்றாட வாழ்க்கையின் அனுபவங்கள் நூலில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இவை தமக்கு மட்டுமே உரிய அனுபவங்கள் அல்ல.
வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற அனுபவங் கள் இருக்கும். இது இயற்கையின் நியதி.
~ ‘திருவருட் சிந்தனை’ ஒரு புதிய முயற்சி. ஆனாலும், பயன் மிகுதியாக இருக்கும்.
திருவருட்சிந்தனையை வழங்கிடும் கலைவாணி சீனி. திருநாவுக்கரசு அவர்கட்கு, ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள்!
நாள்தோறும், திருவருட் சிந்தனையுடன் வாழ்க்கைப் :படிகளில் ஏற இந்நூலை ஓதுதல், ஒரு சாதனம்.
என்றும் G@ இன்ப அன்பு.
குனறககுடி அடிகளார்.