7. இ ராமன் 3877 விளக்கது. உனக்கு இழவோலை கொண்டு நான் இங்கே தாக குய் வந்திருக்கிறேன்; எனது வரவு நிலையை உணராமல் உற வுரிமை கொண்டாடி வினே ஆரவாரமாய்ப் பேசினது உனது அறிவினத்தை விளக்கி நிற்கிறது. அரசு தருவதாக மருவிய உன்னேயும் பெறுவதாக எண்ணிய என்னையும் நீ சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அறியாத மடமையினலேதான் வறிதே பேச நேர்ந்தாய்!” என இங்ஙனம் வீசி எறிந்து வீர கம்பீரமாய் விருேடு உரையாடினன். I - தேரக் கொள்வேன் யானே? தன்னைக்குறித்து அங்கதன் என்னவாறு மதித்திருக்கிருன் என்பதை இதில் அறிந்து கொள்ளுகிருேம். இராவணனே 带 என்று முன்னிலைச் சுட்டாக ஈண்டுச் சுட்டி உரைத்தது உன்னி உணரவுரியது. - நாளை அழிந்து போக உள்ள நீ, எந்தையின் வாலால் கட்டுண்டு பானம் கெட்ட நீ, இனிய என் ஆண்டவனுக்குக் கொடிய பகையாய் மூண் டுள்ள நீ, பழி வழிகளில் இழிந்து பாழாயுள்ள நீ, பாபகாரியங்களைச் செய்து பாவியாய் வளர்ந்துள்ள நீ, என இன்னவாறு பல இழிவுகளை உன்னியுணர நீ என்னும் சொல் இங்கே நேர்ந்து நின்றது.) உன்னை வாலால் அவமானப் படுத்திய மகாவீரனுடைய குமாரனுக்கு நீ கையால் முடி சூட் டுவேன் என்றது கழி மடமையாம் என அவன் விழி எதிரே கின்று வீறுகொண்டு பேசினன். is " இவ்வாறு இழிவு நிலைகளைக் குறித்து உரைத்தவன் அவ் வளவோடு அமையாமல் அதனைத் தெளிவுபடுத்த ஒர் உவமையை விரித்தான். உவமான உரை அவமானமாய் விரிந்தது. - காய்தரக் கொள்ளும் சியம் நல்அரசு என்று கக்கான். நீ தர நான் அரசு பெறுவது நாய் தரச் சிங்கம் கொள்ளு வது போலாம் என அங்கதன் இங்கனம் இலங்கை வேந்தனை நோக்கி உரைத்திருக்கிருன். ** s தன்னைச் சிங்கம் ஆகவும் இராவணனை நாய் ஆகவும் குறிக்