சி. என். அண்ணாத்துரை
17
தான் சற்றேறக்குறைய 3,000 ஆண்டுகளுக்கு முன்
தமிழ் நாட்டைப் பார்த்ததும் ஆரியர்கள் எண்ணி
யிருப்பார்கள். வளமுள்ள நாடும், அதில் வளைந்து
வளைந்து செல்லும் ஆறும், அதற்குப் பக்கத்தில்
வயல்களும் இருக்கக் கண்ட ஆரியர்கள் அத்தகைய
செல்வமுள்ள நாடு தங்களுக்கில்லையே என்று
ஏங்கியிருப்பார்கள். ஆனால், தமிழர்களைப் பார்த்து
நெற்களஞ்சியங்களையும் பணப் பெட்டிகளையும்
காட்டச்சொல்லிக் கேட்டிருக்க மாட்டார்கள்.
கேட்கவில்லை, கேட்க தைரியமில்லை. தைரியமிருக்க,
கையில் மருந்தில்லை; பர்மியர்களைப்போல. தமிழ்
நாட்டில் செல்வங்களைக் கண்டிருப்பார்கள், மித
மிஞ்சிய போக போக்கியத்தில் புரளும் தமிழர்களையும் கண்டிருப்பார்கள், அசூயைப் பட்டிருப்பார்கள், அபகரிக்கவும் நினைத்திருப்பார்கள், ஏழை
காரில் செல்லுகிறவனைக் கண்டு நினைத்ததைப்
போல. ஆனால் அபகரிக்க வேண்டுமென்று நினைத்திருப்பார்களே ஒழிய தமிழர்களிடையே அச்சத்தைப் புகுத்தியிருக்கமாட்டார்கள். அதாவது நெற்
களஞ்சியங்களை, பணப்பெட்டிகளை, பத்திரப்
பீரோக்களைக் காட்டத்தவறிய பர்மியர்களை ஜப்பானியர்கள் சுட்டு வீழ்த்தியதைப்போல தமிழர்களை
ஆரியர்கள் சுட்டு வீழ்த்தவில்லை. சுட்டு வீழ்த்த
வில்லையேதவிர, தமிழர்களது நெற்களஞ்சியங்களையும், பணப்பெட்டிகளையும் கண்ட ஆரியர்கள் அவைகளை அபகரிக்க சூதான திட்டமிட்டார்கள்.
ஜப்பானியர்களுக்கும் ஆரியர்களுக்கும் எண்ணியதை நிறைவேற்றக் கடைப்பிடித்த மார்க்-