உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நிலையும் நினைப்பும்



அவர்களை இடைவிடாகப் பிரசாரத்தால் திருத்த வேண்டும். அவர்களிடத்திலுள்ள வைதீகத்தை விரட்டி அடிக்க பகுத்தறிவை ஆயுதமாக உடைய மாணவப் படையினால் தான் முடியும். அந்தப் படையை இந்தப் பல்கலைக் கழகம் தான் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களைச் சேர்ந்தது. மாணவர்களிடம் நான் கூற ஆசைப்படுகிறேன்: உங்களுடையப் பொறுப்பு பெரிது. கடைசியாக எல்லோராலும் கைவிடப்பட்ட கேசு (Case) உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது, குணப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில். மூட நம்பிக்கையுள்ள மக்களைத் திருத்த டாக்டர்களால் முடியவில்லை; உத்தியோகஸ்தர்களால் முடியவில்லை; ஊராள்வோர்களால் முடியவில்லை, அமைச்சர்களால் முடியவில்லை; கவிஞர்களால் முடியவில்லை; ஒரு காலத்திலே ஆலமரத்தடியில் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி, ஆராய்ந்தார்கள் என்று கூறப்படுகிற காலத்தில் கூட யாகத்தால் முடியவில்லை; வேதத்தால் முடியவில்லை; சித்தர்களால் முடியவில்லை; ரிஷி சிரேஷ்டர்களால் முடியவில்லை. ஒரு காலத்திலும் ஒருவராலும் முடியவில்லை, மனிதனை மனிதனாக்க, மனிதனிடமிருந்து மிருகத்தனத்தைப் பிரிக்க, மனிதனை தேவனாக்க, எண்ணத்திலுள்ள இருளைப்போக்க, மனவளத்தை உண்டாக்க அவர்களால் முடியாததை நீங்கள் முடிக்கவேண்டும்; அவர்களால் சாதிக்க முடியாததை நீங்கள் சாதிக்கவேண்டும். நீங்கள் உங்கள் காரியத்தில் வெற்றி பெற இடைவிடாத பிரசாரம் செய்ய வேண்டும்; நீங்கள் கோபுர வாசலிலே உள்ள