23
சி. என். அண்ணாத்துரை
துக்களை அகற்றி ஆங்கே பண்டைய உயர்ந்த கருத்துக்களைக் குடியேற்ற வேண்டும் என்றும் நினைப்பு
தோன்றியிருக்கின்றன. இந்த நினைப்புகள்
பாமர மக்கள் மனதிலும் தோன்ற நாட்டில் எங்கும்
அறிவுப் பிரசாரம் செய்யப்படவேண்டும். பண்டைய
நம் பண்புகள் பற்றி ஏட்டிலே உள்ளவைகளை
நாட்டிலே உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இப்பொழுது உங்களுக்கு மாத்திரமல்ல பரிட்சை நடக்கப்போகிறது; தமிழகத்திற்கும் தற்காலம் பரிட்சை நேரம். நீங்கள் படிக்கிறீர்கள் உங்களுக்கு ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். நீங்கள் பரீட்சையில் தேறிவிடலாம். ஆனால் தமிழ்நாடு பரீட்சையில் தேற வேண்டுமே! பரிட்சைக்குப் போகும் தமிழ்நாட்டிற்கு யார் பாடம் சொல்லிக் கொடுப்பது? தமிழ் நாட்டிற்குப் போதனை செய்வதற்கு மாணவர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? உங்களைக் கேட்கிறேன்: ஆசிரியர்களைக் கேட்கிறேன்; என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்; நீதியைக் கேட்கிறேன்; அறிவைக் கேட்கிறேன்; வெட்டவெளியில் நின்று ஆகாயத்தைப் பார்த்துக் கேட்கிறேன்? எதிரொலியாவது பதில் தரட்டும். மாணவர்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் தகுதியானவர்கள்.
"யவன நாட்டுக் கலங்கள் தமிழ்நாட்டுக் கடற்கரையை முத்தமிட்டன. தமிழ் நாட்டு முத்துக்களை