உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 219

நிஜாமின் படைகளை நோக்க, ஆங்கிலேயர் படைகள் மிகக் குறைந்த தொகையுடையவை. ஆகவே, வெற்றி தன் பக்கம் என்பதில் அவனுக்கு உறுதி பிறந்தது. இப்புகழை ஹைதருடன் பங்குகொள்ள அவன் உள்ளூர விரும்பவில்லை. ஆகவே, ஹைதர் படைகளைச் சோழநாட்டுக்கு அனுப்பி, உணவுப் பொருள், தளவாடங்கள் ஆகியவைகள் ஆங்கிலேயருக்கு வராமல் தடை செய்யும்படி அவன் வேண்டினான். ஹைதருக்கு நிஜாம் படையின்மீது நம்பிக்கையில்லை. ஆயினும் நிஜாமின் வற்புறுத்தலால், தன் மெய்க்காவல் படை போக மீந்தவற்றை அனுப்பிவிட்டான். நிஜாம் படைகள் சீர்குலைந்தால், மெய்க்காவல் படை கொண்டே சமாளிக்கலாம் என்று அவன் எண்ணினான்.

ஹைதர் எண்ணியது சரியாய் போயிற்று. மைசூர்ப்படை சிறிதானாலும் கட்டுக்கோப்புடையது என்று ஸ்மித் கருதினான். ஆகவே, அதன் பக்கம் சென்று தாக்குவதுபோல் பாவனை செய்து, நிஜாம் பக்கமே சென்று மோதினான். ஆங்கிலேயர் துப்பாக்கிகள் வேறொருபுறமிருந்து படை வீரரிடையே அழிவு செய்தன. சந்தைக் கூட்டத்தில் பாம்பு புகுந்தால் ஏற்படும் கலவரம் நிஜாம் படையில் காணப்பட்டது. நிஜாம் தொலைவிலிருந்து தன் வீரர்களின் ஓட்டத் திறமையைக் கண்டு வெட்கினான். மன்னன் அமைச்சனையும், அமைச்சன் படைத் தலைவனையும், படைத்தலைவன் வீரரையும் குறைகூறிச் சமாளித்தனர். ஆனால், ஆங்கிலேயர் அவர்களுக்குப் பேச்சுக்கும் இடமளிக்காமல் துரத்தினர். ஹைதரின் சிறிய மெய்க்காவற் படை இத்தோல்வியிடையேயும் நிலைமையைச் சமாளித்து, பாதுகாப்புடைய வேறிடத்துக்குப் பின் வாங்கிச் சென்றது.

போரில் எடுத்த அடியில் ஆங்கிலேயர் தற்காலிகமாக வென்றாலும், நாட்செல்லச் செல்ல அவர்கள் பக்கத்திலும் தளர்ச்சி ஏற்பட்டது. ஆர்க்காட்டு நவாபின் படைகள் நிஜாம் படைகளைவிட மோசமாயிருந்தன. வேண்டிய நேரத்தில் வேண்டிய இடத்தில் படையும் பண உதவியும் செய்வதாகக் கூறி அவன் சென்னை அரசியல் தலைவர்களைப் போர் முயற்சியில் ஊக்கியிருந்தான். ஆனால், வரிப் பணத்தைத் தின்றழித்தது தவிர, பணத்துக்கு அவனிடம் வழி ஏதும் இல்லை. திருவண்ணா