உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

அப்பாத்துரையம் - 22

கவர்ச்சி ஒரு சிறிதும் குறையவில்லை. உண்மையில் கவர்ச்சி அனுதாபமாகவும், அனுதாபம் பாசமாகவுமே நாளுக்கு நாள் வளர்ந்தது. அவள் மீது அவர் கொண்ட கனிவு பெருகிற்று. இது வகையில் அவரை மெல்லக் கடிந்து கொண்டவர் பலர். ஆனால், இதை யெல்லாம் அவர் ஒருசிறிதும் செவியில் வாங்கிக் கொள்ளவில்லை. பேரரசு எங்கும் அவர் போக்குப்பற்றிய பேச்சே பேச்சாயிற்று. அவரருகே செல்லும் உரிமைபெற்ற பேரரசுக் கோமான்களும், பேரவைப் பெருஞ் செல்வர்களும் மரபுக் கொவ்வாத அவர் தொடர்பைச் சுட்டிக்காட்டும் முறையில் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துச் சாடையாக நையாண்டி செய்தார்கள். காதுக்குக் காதாகப் பரவிய இச்செய்தி பேரரசின் எல்லைமுழுதும் தாவி, கடல் கடந்த நாட்டிலும் உலவத் தொடங்கிற்று முன்னாட்களில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான் பேரரசையே நெடுங்காலம் கலவரங்களிலும் குழப்பங்களிலும் ஆழ்த்திற்று என்று கூடக் குத்தலாகப் பேசினர்

பலர்.

பேரரசின் தூராதொலைவிலுள்ள

பகுதிகளிலே

நாட்டுப்புற மக்களிடையே துயரங்களுக்கும் மனக் குறைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை இப்போது சீமாட்டியின் செய்தி அவற்றின் அடங்கிய கனலை விசிறி அழல் எழுப்பிற்று. 'பேரரசன் மிங்ஹுவாங் காலத்தில் அவன் ஆசைநாயகி குid எழுப்பினாளே புயல், அதே புயலல்லவா ப்போது மீண்டும் புகுந்திருக்கிறது' என்று புயல்களு கிடையிலும் புதிய சீமாட்டியின் வாழ்வை எவரும் நேரடியாகத் தாக்கத் துணியவில்லை. அவள் உள்ளத்தை ஆட்கொண்டவர் ஒரு சக்கரவர்த்தி - அவர் ஆற்றலின் நிழல் இந்த அளவுக்கேனும் அவளைக் காத்தது.

க்

அவள் தந்தை ஒரு மேலவை உறுப்பினராய் இருந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் குடும்பத்துக்கு இருந்த மதிப்பை அவர் மனைவி ஒரு சிறிதும் மறக்கவில்லை. அவர் இறந்தபின் வருவாய் குன்றிவிட்டது; இக்கட்டுகள் பல ஏற்பட்டன் ஆனாலும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்

அரும்பாடுபட்டு அம்மாதரசி தந்தையற்ற தன் புதல்வியைப் பேணி வளர்த்தாள். இவ்வளர்ப்பில் அவள் கண்ட வெற்றி