உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

அப்பாத்துரையம் - 22

இதெல்லாம் ஒரு வெறும் கனவா, என்ன ! - நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர், ஓர் இளவரசர் -என் போன்ற ஒரு தாழ்ந்த உயிரினத்துக்காக நீங்கள் இந்த அளவுக்கு உங்களைத் தாழ்த்திக் கொள்ள முடியுமென்று என்னால் நம்ப முடியவில்லை! உங்கள் கருணை என்னை மூழ்கடிக்கிறது. ஆனால், என் நிலை என்ன என்பதை நீங்கள் மறந்தே விட்டீர்களென்று கருதுகிறேன். நான் யார்? ஒரு சூரியோவின் மனைவி, இதை எதுவும் மாற்ற முடியாது. நீங்கள்...’

தன் முரட்டு நடவடிக்கையால் அவளுக்கு எவ்வளவு வேதனையும் குழப்பமும் ஏற்பட்டு விட்டன என்று கெஞ்சி இப்போது காணத்தொடங்கினான். தன் செயலை எண்ணி அவன் தானே வெட்கமுற்றான். ஆயினும் அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு விளக்க ஆறுதல் கூற முனைந்தான்.

6

சமூகப்படிகள், உயர்வுதாழ்வுக் கணக்குகள் ஆகிய வற்றைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஒரு மண்டைக்குள் இவற்றை யெல்லாம் கொண்டு திரிவதென்பது தலைசுழல்கிற காரியம்! ஆனால் என்னைப் பற்றி நீ என்னென்ன கேள்விப்பட்டிருப்பாயோ? அது எதுவானாலும் நான் உறுதியாகக் கூறுகிறேன். காதல் வேட்டை பற்றி நான் எதுவும் அறியாதவன், அதைப் பயிலாதவன் இன்றைய என் செயலைப் பற்றி உண்மையில் நாளை உன்னைவிட நானே மிகுதி வியப்படைவேன்.ஆனால் இச் செயல் கட்டாயம் அந்த வகையைச் சேர்ந்ததன்று.’

இதுபோன்ற பத்திருபதுக் கணக்கான செயல் விளக்கங்களை அவன் பின்னிப் பின்னி இழைத்தான். ஆனால் இத்தனைக் கிடையிலும் அவள் பெண்மை தன் நிலைமையைத் தெளிவாக உளங் கொண்டு விட்டது. கட்டுதிட்ட ஆசாரப் பேச்சுகளிலிருந்து ஒரு சிறிது நழுவி விட்டால், இளவரசன் ஒப்பற்ற அழகுக் கவர்ச்சியின் முன் தான் மசிந்துவிட நேர்வது உறுதி என்று அவள் கருதினாள். ஆகவே தன் நடத்தை எவ்வளவு தலை நிமிர்வாக, எவ்வளவு தரங் கெட்டதாகத் தோன்றினாலும், அவன் விளக்கங்கள் எதனையும் ஏற்கக் கூடாதென்று அவள் துளிந்தாள். தன் குழப்பத்தைத் தெளிவித்துத் தன்னை ஆட்கொள்ளும் முயற்சிகளாகவே அவற்றைக் கருத முனைந்தாள்.