இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖ |
கிளர்ந்து நடைப்பட்டிருக்குமானால் அடிகளார் இயக்கம் தோன்றி எண்பான் ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் ஆட்சி மொழிச் சிக்கலோ, பயிற்று மொழிச் சிக்கலோ, வழிபாடு வழக்கு இசை அறிவியல் என்பவற்றின் நிலை மொழிச் சிக்கலோ இருக்க வாய்ப்பில்லையாம். அவ்வாய்ப்புகள் உண்டாதலே அடிகளார் மாண்பையும் கடைப்பிடிகளையும் உலகறியச் செய்யும் உயர்வினதாம்! இங்குக் குறிக்கப்பட்ட மாண்பு மொழி பற்றியதே! அடிகளாரின் பல்துறையறிவும், சமயச் சீர்திருத்த நோக்கும், பிறவும் தனித்தனி மாண்பினவாம்.
இரா. இளங்குமரன்