உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
88

❖ மறைமலையம் - 3 ❖

அறியாவாறு தப்பினவன் மறுமையிற் சூக்குமவுடம்பிற் சென்றவுடனே, இத்தகையோரை மிகவும் தண்டித்தற் பொருட்டுத் தென்றிசைக்கண்ணேயுள்ள சூக்கும வுலகத்தில் முழு முதற்கடவுளால் நியமிக்கப்பட்ட அறக்கடவுள் அவனைப் பிடித்து அவன் செய்த குற்றங்களை அவனுக்கு விளங்க அறிவித்து இருள், அளறு என்று சொல்லப்படும் நரகங்களில் அவனை விழுவித்து வருத்துவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/121&oldid=1623806" இலிருந்து மீள்விக்கப்பட்டது