உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் – 5

இப் பிறப்பு முழுதும் எண்ணிய எண்ணங்கள் மட்டும் அல்ல. மேற்சென்ற எண்ணிறந்த பிறவிகளில் எண்ணிய எண்ணங்களும், இனி வரும் பிறவிகளில் எண்ணும் எண்ணங்களும் எல்லாம் ஒரு தினையளவு கூடப் பிசகாமலுங் குறைந்து போகாமலும் அப்படியே இம்மனவெளியிற் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அருந்தவமுயற்சியால் தமது உள்ளத்தை ஒருவழி நிறுத்தி நுண்ணிய உள்பொருள்களின் இயல்புகளைக் காணும் ஆற்றல் வரும் போது, ஒவ்வொருவருந் தாந்தாம் எடுத்த பிறவிகளின் வரலாறுகளையும் அப் பிறவிகளிற் றாந்தாம் எண்ணிய எண்ணங்களையும் இம் மனவெளி என்னும் புத்தகத்தில் தெளிவாகக் கற்று அறிந்துகொள்வார்கள். இம் மனவெளியில் தமது நினைவைப் பொருத்திவைத்து உணரும் பழக்கம் வாய்ந்தவர்கள், வேண்டுமானால், தம்மிடத்து வரும் ஒவ்வொருவர் நினைவுகளின் இயற்கைகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் எளிதிலே அறிந்துகொள்வார் களாகையால், ஒருவருக்குந் தெரியாமல் நாம் இச் செயல்களைச் செய்தோம், நாம் இந் நினைவுகளை நினைந்தோம் என்று எண்ணுவது மிக்கதோர் அறியாமையாகும். அது நிற்க.

இன்னும் இம் மனவெளியின் இயல்பை அறியாமை யினாலேதான், மக்களிற் பெரும்பாலார் தாம் எண்ணும் எண்ணங்கள் எல்லாந் தமக்கே உரியனவென்று பிழையாகக் கருதி மிகவுந் துன்பப்படுகிறார்கள். உண்மையாக நோக்குங்கால், நம்முள் ஒவ்வொருவரும் நினைக்கும் நினைவுகளிற் பெரும் பாலன பிறருடையனவே யாகும். மனவலிமை மிக்கவர்கள் நினைக்கும் நினைவுகள் இம் மனவெளியில் எங்கும் பரவி இதன்கட் L டமது உள்ளத்தை வைத்தவர்கள் எல்லார் உள்ளத்திலும் பிறக்கும். கல்வியறிவாலாயினும், உயர்ந்த உள்பொருள்களை அறியும் அறிவாலாயினும் மிக்கவர்கள் தம் நினைவுகளை உலக முயற்சிகளினின்றும் பிரித்து ஆழ்ந்த நிலையில் உய்த்து இருத்தும்போது, அவர்கள் அறிவானது மனவெளியில் இயைந்திருக்கின்றது. இங்ஙனம் ஒரு தேயத் திலுள்ள அறிவுடையார் ஒருவர் தமது ஆழ்ந்த நினைவால் மனவெளியில் தொடர்பு உடையராயிருத்தல் போலவே, வேறொரு தேயத்திலுள்ள கற்றவரும் அதிற் றமது கருத்தை நாட்டியிருப்பர். அங்ஙனம் அவ்விருதிறத்தார் நினைவுகளும் அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/51&oldid=1576492" இலிருந்து மீள்விக்கப்பட்டது