உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 15.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம்

vii

தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதிபூண்டவர்

தமிழ் மொழியில் படிந்த எல்லைமீறிய பிறமொழி மாசினை களைந்து தமிழின் தூய்மையினைப் பேணி, தமிழைத் தமிழாகவும், தமிழனைத் தமிழனாகவும் வாழவைத்த பெருமை மறைமலையடிகளாருக்கே உண்டு.

தனியொரு மானிடனாக நின்று தன்னை எதிர்த்த எதிர்ப்புக்களையெல்லாம் துகளாக்கி வெற்றிக்கண்டவர் மறைமலையடிகளார். தனியொரு மானிடரால் இவ் வெற்றியை ஈட்டமுடியுமெனில் தமிழினம் ஒருங் கிணைந்து தன்னிலை உணர்ந்து தமிழைத் தமிழாக வாழ்விக்க உறுதிபூணில் எவரும் அதனை தடுக்க முடியாது.

-

ஈழத்து அறிஞர் ஈழவேந்தன்

தமிழக மறுமலர்ச்சியின் தந்தை மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_15.pdf/8&oldid=1582838" இலிருந்து மீள்விக்கப்பட்டது