இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மேதக வறிஞர் தோன்றுவர்; கவிஞர்கள் பிறப்பார்கள் என்று அறிஞர்கள் விதந்து ஓதுகிறார்கள். சொல்லின் செல்வ ரான மறைமலையடிகள் அவ்வகை மேதகவறிஞர் வரிசையில் வந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தோன்றி வாழ்ந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புகழுடம்படைந்த அடிகள் அறிஞர் உலகில் மாமேரு மலைபோல் விளங்கியிருந்தார்.
-திரு. நாரண துரைக்கண்ணன்
திட்பமும் நுட்பமும் கொண்ட அடிகளாரின் உரை நடையிற் பண்டை உரையாசிரியர்களின் போக்கினைக் காண்கிறோம். சீரழிந்து, செயலிழந்து கிடந்த தமிழ் உரைநடையை அடிகள் உயிரூட்டிப் புதுப்பித்தார்.
- புலவர். இரா. செல்வக்கணபதி
உழை
உயர் உதவு
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை 600 017
தமிழ்மண் தொலைபேசி : 044 24339030