உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. பறக்கும் குதிரை

லநாட்டுக் கதைகளிலும் வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளது. பறக்கும் குதிரையைப்பற்றிய செய்திகளும் மிகப்பழங்காலக் கதைகளில் காணப்படுகின்றன. தமிழகத்தில் சாத்தன் என்ற பண்டைப் பழந்தெய்வத்தின் ஊர்தியாகப் பறக்கும் குதிரை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் சிற்றூர்களில் ஒன்றில் இன்னும் ஆண்டுக்கு ஒருநாள் பறக்கும் குதிரை விழா நம்பிரான் விழா என்ற பெயருடன் பழைய சாத்தன் அடியவர் களின் பரம்பரையினரால் நடத்தப்பட்டு வருகிறது. கிரேக்கரின் பறக்கும் குதிரையாகிய “பெகாஸஸ்” பற்றிய கதையை இவ் ஒப்புமைகளுடன் இங்கே தருகிறோம்.)

கொரிந்த் நகரில் ஒரு பறக்கும் குதிரை இருந்தது. அதை யாராலும் பிடிக்கவோ அதன்மீது ஏறவோ முடியவில்லை. பிடிப்பவர் அணுகுமுன் அது அவர்களை உதைத்துத் தள்ளி வானில் பறந்து வட்டமிட்டு, வீறுடன் மீண்டும் இறங்கி வந்து, "ஏறாக்குதிரை யாக இறுமாந்து நின்றது. அதன் பெயர் பெகாஸஸ். அது தூயவெள்ளை நிறமுடையதாய், மண்ணுலகக் குதிரைகளைவிட உயரமும் பருமனும் உடையதாயிருந்தது.

மக்கள் அக்குதிரையைத் தெய்விகப்பிறவி என்றே கருதினர். மெடூசாவின் தலையைப் பெர்ஸியஸ் வெட்டியபொழுது, அதினின்று தெறித்த குருதி ஒரு குதிரை உருவில் படிந்தது. தேவர்கள் அதை ஒரு தெய்விகக் குதிரை ஆக்கினர். இக்குதிரையையே பெகாஸஸ் என்று கொரிந்த் மக்கள் கூறினர்.

பெகாஸஸைப் பிடிக்கப் பலதடவை முயன்று தோல்வி யுண்டவர்களுள் கொரிந்த் அரசன் மகனான பெல்லராஃவான் ஒருவன். ஆனால், மற்றவர்களைப்போல அவன் தோல்விகளால் மனமுறிவடையவில்லை. ஒவ்வொரு தோல்வியும் அவன் ஆவலைப் பெருக்கிற்றேயன்றித் தணிக்கவில்லை. விடாமுயற்சி