20
அப்பாத்துரையம் - 41
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்.
திருவள்ளுவர்.
பலருக்கு வாழ்க்கை என்பது கிளர்ச்சிதரும் பல நிகழ்ச்சிகளின் தொடர்பாக மட்டுமே காணப்படுகிறது. ஆனால் வாழ்க்கை என்பது புறநிகழ்ச்சி எதுவுமன்று; அவற்றால் அகத்தே ஏற்படும் சிறு சிறு மாறுபாடுகளின் தொகுதியே என்பதனை அவர்கள் உணர்வதில்லை.
ஓர் அறிஞர்.
மாறுபாடற்ற ஒழுங்கமைதி என்பது சிறுமை உள்ளங்
களின் அறியாமையால் வரும் மாய மருட்சி.
எமர்ஸன்.
வாழ்க்கை என்பது ஓர் இசையரங்கேற்றம்; ஆனால் அதில் யாழ் வாசிப்பவன் மேடையில் அரங்கேற்றும் போதுதான், யாழ் மீட்டவும் பயிற்சி பெற்றுக் கொள்ள முனைகிறான்!
சாமுவேல் பட்லர்.
வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியற்ற வாழ்க்கை, வாழத் தகுந்த
தல்ல.
எழுத்தளவில்
அறிவராயிருப்பது
மிக
சாக்ரடீஸ்.
எளிதே;
வாழ்க்கையில் அறிவராயிருப்பது அத்துணை எளிதன்று.
செக்காவ்.
நாம் எவ்வளவு நாள் வாழ்வோம் என்பது முக்கியமன்று; எங்ஙனம் வாழ்கிறோம் என்பதே முக்கியமானது.
பெய்லி.
உணர்ச்சித் திறமுடையவர்கட்கு வாழ்க்கை ஒரு துயர் நாடகம். அறிவுறுத்திற முடையவர்க்கு அது ஒரு களி நாடகம்.
லாபுருயேர்.