அறிவுச் சுடர்
51
முழுநிறை அறிவு நாற்கூறுடையது. அவையே அறிவு அதாவது நேர்மையான செயல் செய்யும் ஒழுங்கு முறை; நேர்மை, அதாவது தனி வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் ஒப்ப நடக்கும் நிலை; வீரம், அதாவது இடர் கண்டு விலகாது ஏற்றல்; தன்னடக்கம், அதாவது அவாவை அடக்கி வழிப்படுத்தல்.
பிளேட்டோ.
மெய்யறிவர் உள்ளம் பளிங்கு போன்றது. அது வானகத்தின் ஒளியை ஏற்ற நமக்குத் தருகிறது.
33. அன்பு
ராஷ்ஃபூகால்டு.
அன்பு தானே கொடுக்கும், தன்னையே கொடுக்கும்; ஆனால் அதை விலைக்குப் பெற முடியாது.
லாங்ஃவெல்லோ.
அன்பிலார் எல்லாந் தமக்குரியர், அன்புடையார்
என்பு முரியர் பிறர்க்கு.
திருவள்ளுவர்.
நாம் எதில் அன்பு செலுத்துகிறோமோ, அதுவே நம்மை உருவாக்கி நம் பண்பாயமைகிறது.
கெதே.
அன்புக்கு அழிவு இல்லை; அன்புக்குரியவர் அதனை ஏற்கா விட்டால்கூட, அன்பு செய்பவரிடமே அது மீண்டு அவரைச் கனியச் செய்து தூய்மைப்படுத்தி உயர்வுறுத்தும்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.
வாஷிங்டன் இர்விங்.
திருமூலர்.
அன்பு கடவுளின் வடிவுரு; உயிரற்ற உருவன்று, உயிருடைய உரு; கடவுளியல்பின் நிறைநலப் பண்புகளின் உயிரியங்கும்
வடிசாற்றின் சாயல் அது.
மார்ட்டின் லூதர்.