உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டின் இயற்கை துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து" என்பதுடன் கொண்டுபோய் இணங்கக்கொளுத்தி, ஆசிரியர் இச்செய் யுளைத் திறம்பட நடாத்தும் நுட்பவினையின் அருமைப் பாட்டை உய்த்துணர்ந்து மகிழ்ந்துகொள்க. இன்னும் இவ் வகப்பொருள் முல்லை யொழுக்கத் தினை இவ்வாறு நடாத்திக்கொண்டு சென்று, அ அ - வது வரியில் "இன்பல் இமிழிசை ஒர்ப்பனள் கிடந்தோள்" என்பதுடன் முடிக்குமிடத்தும் வினைவயிற்பிரிந்த தலை மகன் மீண்டு வந்தமை சொல்லவேண்டுதலின், அங்ங னஞ் சொல்லப்படும் பொருளையுங் கற்போர் உற்றுநோக் கும் பொருட்டு, 'இவ்வாறு கிடந்தோளுடைய அழகிய செவி நிறைய ஆரவாரித்தன' என்று மேல் ஒட்டப்படுஞ் சொற்றொடரின் பயனிலையான 'ஆரவாரித்தன' என்ப தை, முடிக்கப்படும் அகப்பொருளின் இறுதி மொழி யான 'கிடந்தோள்' என்பதுடன் சேர்த்தி, அதன் எழு வாயான 'வினை விளங்கு நெடுந்தேர் பூண்டமாவே' என் பதைக் கடையிலே நிறுத்தி, அவ்விரண்டற்கும் இடை யில் அவன் மீண்டு வந்தமை விளங்கக்கூறி அமைத்தார். முடிக்கின்ற இடத்திற் கிடந்தோள் செவிகிறைய ஆலின' என்று உரைப்பின், எவை ஆலின? என்னும் ஆராய்ச்சி தோன்றி மேல்வரும் பொருள் அறிய வேட்கை மிகும் ஆதலால், இவ்வாறு பயனிலையை முன்னும் எழுவாயைப் பின்னுமாக வைத்துப் பிறழக்கூறினார் என்க. இங்ஙனம் பிறழக் கூறுதல் பொருள்வலிவு. தோன்றுதற் பொருட் டுங், கற்பார்க்கு மேலு மேலும் விழைவுள்ளந் தோற்று வித்தற் பொருட்டுமேயாம் என்பது ஆங்கிலமொழியிற்*

  • Alexander Bain's English Composition and Rhet-

oric, Part I, Rules 10-14. 5