உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவும் பாட்டின் நடையும் ருகூ மற்றுப, பண்டைக்காலத்துப் புலவரின் அகவற் பாட்டுக்களோ பொருள் இயையுக்கு இணங்க ஓசை பாறி மாறி நடந்து கேட்பார்க்குக் கழிபேர் உவப்புணர் வினைப் பயந்துநிற்கின்றன. இவ்வாசிரியர் நப்பூதனார், சில அடிகளில் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகை பொருநதவைத்தும், வேறுசிலவற்றில் முதலும் நான்கும் எதுகை பொருந்தா செய்தும், மற்றுஞ சில அடிகள் இரண்டிரண்டாய் முதற்றிரில் அவ்வாறு எதுகை பொருந் தக்கொளுவியும், பின்னுஞ் சிலவறறில் அதுதானு மில்லா மல் யாத்தும் இப் பாட்டி னைப் பலவகையால் ஓசையின் பம் மாறி மாறி வரத தொடுத்தார். இன்னும் ஆங்காங்கு அமைக்கப்படும் பொருள்களுக்கு இணங்க அடிகல் மெதுவாகவும், விரைவாகவும், இடைகிடையே தெற்றுப் பட்டுஞ் செல்கின்றன. பாடிவீட்டு இயற்றும் இடத்தில் ஓசை தெற்றப்பட்டுச் செல்கின்றது; அரசன் பாசறையி லுள் இருக்கும் நிலையைச் சொல்லுமிடத்து ஓசை மெது வாக நடக்கின்றது; அவன் மீண்டு விரைந்துவருமிடத்து விரைந்து போகின்றது. இவையெல்லாம் அறிவு ஒருங்கி ஆராய்நது உணர்ந்துகொள்க. இனி, இப்பாட்டினுள் இடைச் சொற்களையும் வேற்றுமை யுருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற் கள் சிறிதேறக்குறைய ஐந்நூறு சொற்களாகும்; இவற் அள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந் தது எண்ணப்படவில்லை. இவ்வைந்நூறு சொற்களுள் நேமி" கோவலர்' 'படிவம்' 'கண்டம்படம்' 'கணம்' 'சித்தித்து' 'விசயம்' 'அஞ்சனம்' என்னும் ஒன்பதும் டைசொற்கள்; யவனர்' 'மிலேச்சர்' இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச்