உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

79

ல ள ழ மூன்றும் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ல முன்னும் ள இடையும், ழ பின்னும் தோன்றின. ஆதலால், அல்லீறு பின்னர் முறை யே அள். அழ் எனத் திரிந்தது.

லகர மெய்யீறு ரகர மெய்யீறாகத் திரியும்.

எ-டு: குடல்-குடர்.

லகரம் தகரமாகவும் திரியும். ஆயின், வல்லின மெய் தமிழில் ஈறா காமையால் உகரம் ஏறப்பெறும்.

எ-டு: மெல்-மெது.

அள்-குறள்

ள்-செதிள்

அழ்-புகழ்

இழ்-குமிழ்

அர்-வளர்

இர்-குளிர்

உர்- -

உள்-உருள்

உழ்-கலுழ்

துளிரைத் துளுர் என்பது கல்லா மக்கள் உலக வழக்கு.

ரறவும் தமிழில் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ர முன்னும் ற பின்னும் தோன்றின. ரகர மெய்யீறு சிலவிடத்து றகர மாகத் திரியும். றகரம் வல்லின மெய்யாதலின், உகரம் ஏறப்பெறும்.

எ-டு:

ஒளிர்-ஒளிறு

அர்-அறு

இர்-இறு

எ-டு : சிதறு

எ-டு : குளிறு

எ-டு : குமுறு

உர்-உறு

நால்வகை மீறுகள்

தனியீறு, கூட்டீறு, திரியீறு, விரியீறு என ஈறுகள் நால்வகைப் படும். ‘அம்' போன்றது தனியீறு; ‘அம்பு’ (அம்+பு), ‘அம்பம்’ (அம்+பு+அம்) போன்றவை கூட்டீறு. அன், அல், அள், அழ், அர், அது, அறு என்பனவும் இவற்றிற்கொத்த இகர வுகர முதலீறுகளும் திரியீறு; 'அக்கு’ (அ கு-அக்கு), அத்து (அது-அத்து) போன்றன விரியீறு.

இவற்றிற் கெடுத்துக்காட்டு வருமாறு:

ஈ று

அம்-அம்பு

அம்-அம்பு-அம்பம்

அம்பு

அம்பு-அம்பம்

எடுத்துக்காட்டு

அரம்-அரம்பு-அரம்பம்

புறம்-புறம்பு

வில்-விளம்பு

சிலம்பு-சிலம்பம்