இயனிலைப் படலம்
ள
79
ல ள ழ மூன்றும் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ல முன்னும் ள இடையும், ழ பின்னும் தோன்றின. ஆதலால், அல்லீறு பின்னர் முறை யே அள். அழ் எனத் திரிந்தது.
லகர மெய்யீறு ரகர மெய்யீறாகத் திரியும்.
எ-டு: குடல்-குடர்.
லகரம் தகரமாகவும் திரியும். ஆயின், வல்லின மெய் தமிழில் ஈறா காமையால் உகரம் ஏறப்பெறும்.
எ-டு: மெல்-மெது.
அள்-குறள்
ள்-செதிள்
அழ்-புகழ்
இழ்-குமிழ்
அர்-வளர்
இர்-குளிர்
உர்- -
உள்-உருள்
உழ்-கலுழ்
துளிரைத் துளுர் என்பது கல்லா மக்கள் உலக வழக்கு.
ரறவும் தமிழில் ஒரே காலத்துத் தோன்றவில்லை. ர முன்னும் ற பின்னும் தோன்றின. ரகர மெய்யீறு சிலவிடத்து றகர மாகத் திரியும். றகரம் வல்லின மெய்யாதலின், உகரம் ஏறப்பெறும்.
எ-டு:
ஒளிர்-ஒளிறு
அர்-அறு
இர்-இறு
எ-டு : சிதறு
எ-டு : குளிறு
எ-டு : குமுறு
உர்-உறு
நால்வகை மீறுகள்
தனியீறு, கூட்டீறு, திரியீறு, விரியீறு என ஈறுகள் நால்வகைப் படும். ‘அம்' போன்றது தனியீறு; ‘அம்பு’ (அம்+பு), ‘அம்பம்’ (அம்+பு+அம்) போன்றவை கூட்டீறு. அன், அல், அள், அழ், அர், அது, அறு என்பனவும் இவற்றிற்கொத்த இகர வுகர முதலீறுகளும் திரியீறு; 'அக்கு’ (அ கு-அக்கு), அத்து (அது-அத்து) போன்றன விரியீறு.
இவற்றிற் கெடுத்துக்காட்டு வருமாறு:
ஈ று
அம்-அம்பு
அம்-அம்பு-அம்பம்
அம்பு
அம்பு-அம்பம்
எடுத்துக்காட்டு
அரம்-அரம்பு-அரம்பம்
புறம்-புறம்பு
வில்-விளம்பு
சிலம்பு-சிலம்பம்