இயனிலைப் படலம்
பன்மை
(1) முன்னிலைப் பன்மைப் பெயரினின்று தோன்றியவை
(ஊம்) - உம்.
உம்+கள்.
எ-டு : செய்யும்
எ-டு
டு : செய்யுங்கள்
எ-டு : செய்ம்மின்கள்
உம்+(நீம்+ஈம்-இம்)-இன். எ-டு : செய்யுமின்-செய்ம்மின்
மின்+கள்
37
மின் என்னும் ஈற்றின் மகரம் நெறி (விதி) முதல் என அறிக. கள் என்பது படர்க்கை யீறேனும் இரட்டைப் பன்மை குறித்து மூவிடத்தும் வரும்.
எ-டு: நாங்கள், நீங்கள், அவர்கள்.
செய்யுமின் என்பதிலுள்ள உம்மின் (உம்+இன்) என்னும் இரட்டைப்பன்மையை, செய்யுங்கள் என்பதிலுள்ள உங்கள் உம்+கள்) என்பதுபோலக் கொள்க. செய்ம்மின் என்பதன் இரட்டைப்பன்மைப் பொருள் மறைந்தபின், கள்ளீறு பிறவற் றொடு சேர்ந்ததுபோல் அதனோடும் சேர்ந்தது. இம் முக்கைப் பன்மையைப் பெண் பெண்டாட்டி எனப்துபோன்ற மீமிசைச் சொல்லாகக் கொள்க.
(2) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது.
செய்+உது+ஈர் = செய்யுதீர்-செய்யுதிர்செய்திர்.
(3) செய்யாய் என்பதற்கொத்து சொல்லும் வடிவம். வியங்கோள்வினை மீறுகள்
வியங்கோள்வினை யீறுகள் மூவகையில் தோன்றும். (1) தொழிற்பெய ரீறுகள்
அல். எ-டு:செயல்.
66
'ஒல்லும் வகையால் அறவினை யோவாதே
99
செல்லும் வாயெல்லாம் செயல்.
(குறள்.33)
தல். எ-டு: செய்தல்.
(2) அகரவீற்று வினையெச்ச ஈறு
செய்ய-அ. எ-டு: வரப்புயர!
"இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்.
(தொல்.502)
நடக்க-க. எ-டு; வாழ்க!