உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

என்பதில், எருமை என்பது வடுகர் தலைவன் ஒருவனின் பெயரைக் குறித்ததேயன்றி, அவனை எருமைநாட்டொடு தொடர்புபடுத்திய

தன்று.

எருமைக்கு வடமொழியில் மகிசம் (மகிஷ) என்று பெயர். அதனால் எருமையூர் என்பதைப் பிராமணர் மகிசபுரி என மொழிபெயர்த்தனர். அச் சொல் அதன் ஆங்கில வடிவையொட்டி இன்று மைசூர் என வழங்குகின்றது.

“மாவா ராதே” (273) என்னும் புறப்பாட்டைப் பாடிய எருமை வெளியனார் என்னும் புலவர், எருமையூரினராவர். “இருள்கிழிப் பதுபோல்” என்னும் 72ஆம் அகப்பாட்டைப் பாடிய கடலனார் இவர் மகனார் ஆவர்.

நன்னன்

எருமை நாட்டிற்கும் குடமலைக்கும் மேற்கிலுள்ள தென் கன்னடப்பகுதி, கொண்கானம் என்னும் பெயர்கொண்டதாகும். கொண்கு துறைமுகம் அல்லது கடற்கரை. கொண்கன் நெய்தல் நிலத்தலைவன். கொண்கானம் கடற்கரை நிலமாதலால் அப் பெயர் பெற்றது போலும்!

கடைக்கழகக் காலத்தில் கொண்கானத்தை ஆண்டவன் நன்னன். அவன் தலைநகர் கடம்பின் பெருவாயில் என்பர். ஏழிற் குன்றம் என்னும் பெருமலையையும் பாழி, பாரம், வியலூர், பிரம்பு என்னும் பேரூர்களையும் உடையது கொண்கானம். அவ் வூர்களுள் பாழி ஒரு வல்லரண் நகர். அது ஏழில்மலையின் எழு குவடுகளுள் ஒன்றான பாழியை அரணாகக் கொண்டதாகத் தெரிகின்றது. நன்னன் ஒரு கொடையாளியாகவும் இருந்தான்.

பொன்படு கொண்கான நன்னன் நன்னாட் டேழிற் குன்றம் பெறினும்"

இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

(நற்.391)

ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில்"

(அகம். 152)

CC

சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன்

பாழி அன்ன கடியுடை வியனகர்"

(அகம்.15)

நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்

வயலை வேலி வியலூ ரன்ன

(அகம்.97)

நன்னன் வேளிர் மரபைச் சேர்ந்தவன் என்பது, வேண்மான்

என்னும் பெயராலும்,